விவசாயக் கடன் 10,000 கோடிக்கு ஊழல்

 விவசாயக் கடன் 10,000 கோடிக்கு ஊழல் மத்திய அரசின் ரூ. 52,000 கோடி விவசாயக்கடன் தள்ளுபடி திட்டத்தில் கிட்டத்தட்ட ரூ. 10,000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக பா.ஜ.க குற்றம் சுமத்தியுள்ளது .

இது குறித்து பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் தெரிவித்ததாவது , காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழலை தொடர்ந்து ஐமு., கூட்டணி அரசின் மற்றொரு ஊழல் இப்போது அம்பலமாகி உள்ளது . விவசாயகடன் தள்ளுபடி திட்டத்தில் பெரும்அளவில் முறைகேடு நடந்திருப்பதை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

ரூ.52,000 கோடி கடன் தள்ளு படியில் ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக ஊழல் நடந்திருக்கிறது . தகுதியுள்ள 34 லட்சம் விவசாயிகளின்கடன் தள்ளுபடி செய்யப்பட வில்லை. ஆனால் தகுதி இல்லாத 24 லட்சம் பேரின் கடன் தள்ளுபடிசலுகை பெற்று பெரியளவில் ஆதாயம் அடைந்துள்ளனர்.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட போதே, ஒரு சார்புடையதாக இருந்தது. குறிப்பாக கடன்பெற்ற விவசாயிகள் ஒரு முறை தவணைத் தொகைசெலுத்தியிருந்தாலும், அவர்களுக்கு தள்ளுபடிவழங்க முடியாது என அறிவிக்கப்பட்டது. அதனால் தான் ரூ. 52 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி வழங்கப்பட்ட போதிலும், உண்மையான, தகுதி வாய்ந்த விவசாயிகள் பலர் கடன்சுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிகதொகையும், பிறகட்சிகள் ஆளும் மாநிலங்களில் குறைவானதொகையும் கடன்தள்ளுபடி வழங்கப்பட்டது. இது போன்று பாரபட்சமாக செயல்படுவது தான் ஐ.மு., கூட்டணி அரசின் உண்மை முகமாகும்.

இந்த ஊழலுக்கு காரண மானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனவே இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...