உயிருக்கு விளையும், மதிப்பும் நிர்ணயிக்கும் காங்கிரஸ்

 உயிருக்கு  விளையும், மதிப்பும் நிர்ணயிக்கும் காங்கிரஸ்உயிர் என்பது எல்லாம் ஒன்றுதான்..எல்லாம் ஒரே மரியாதைக்கு உட்பட்டதுதான். இதிலே மதமும் மாகாணமும் பணமும் படிப்புக்கும் இடமில்லை..

இதை சாதாரண பாமரன்கூட ஏற்றுக்கொள்கிறான். அரசியல் வாதியைத்தவிர. அதிலும் கடைந்தெடுத்த கான்கிரச்காரனைத்தவிர

ராகுல் காந்தி –உ.பி.யில் “குண்டாஸ்” களால் கொல்லப்பட்ட துணை போலிஸ் சூப்ப்ரன்ட்– ஜியாஉல் ஹக் அவர்கள் கிராமத்திற்கு ரகசிய திடீர் விஜயம் செய்து அவருடைய மனைவி பிரவீன் ஆசாத்தை பார்த்து ஆறுதல் கூறினார் —செய்தி

இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது எல்லா அரசியல் தலைவரும் செய்வதுதானே? என்று நீங்கள் கேட்பது புரிகிறது ..

இதில் எவ்வளவு ஆச்சரியம் இருக்கிறது /–என்னென்ன ஆச்சரியம் இருக்கிறது?–பார்ப்போமா?

1..காலை 11.40 க்கு கோரக்பூர் ஏர்போர்ட்டில் வந்திறங்கிய ராகுல் காந்தி, 1.மணி 20 நிமிடம் புழுதி படர்ந்த கிராமசாலை களில் பயணம் செய்து கொல்லப்பட்ட டி.எஸ்.பி. ஜியாஉல் ஹக்கின் கிராமத்திற்கு சென்று அவரது மனைவியை சந்தித்து சுமார் ஒருமணி நேரம் ஆறுதல் கூறினார்..

2..இந்த ஆறுதல் போதாதென்று மறைந்த ஜியாஉல் ஹக் அடக்கம் செய்யப்பட்ட அவரது சொந்த கிராமத்திற்கு சென்று அவரது சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார்


பாமரனின் கேள்வி இதுதான்…

இதே பாசம் பரிதாபம்–ஆதங்கம் அன்பு–கருணை–ஆர்வம்–இதற்க்கு முன்பு “குண்டாஸ்”களால்–அல்லது தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பல போலிஸ் அதிகாரிகளின் மீது ராகுல் காந்திக்கு என் வரவில்லை?–அவர்கள் வீடுகளுக்கு என் செல்லவில்லை? எல்லா உயிர்களும் இறைவன் படைப்பில் ஒன்றுதானே…உயிரிகளின் மீது பிறக்கும்போது இறைவன் ஏதாவது “இது உயர்வு—இது தாழ்வு ” என “டேக் ” கட்டி அனுப்புகிறானா?

2008 செப்டம்பர் 13 டெல்லியில் 5 இடங்களில் பயங்கரவாதிகளால் குண்டுவைக்கப்பட்டு 30 பேர் கொல்லப்பட்டனர்==100 பேர் காயமடைந்தனர் ..அதற்க்கு காரணமான  பயங்கரவாதிகள் “பாட் லா ஹவுஸ் ” என்னும் இடத்தில் இருக்கின்றனர என்ற தகவல் கிடைத்து அவர்களை பிடிக்கும் போது அவர்களால் சுடப்பட்டு இறந்த இன்ஸ்பெக்டர் மோகன் சந்த சர்மாவின் வீட்டுக்கு ராகுல் காந்தி என் செல்லவில்லை

அத்திப் அமீன்–முஹமது சஜித் என்பவர்கள் கொல்லப்பட்ட பயங்கர வாதிகள்.–கொல்லப்பட்டவர் உயிரின் மீது “உயர்ந்தவர் ” என்ற ” டேக்” ஐ யும் இன்ஸ்பெக்டர் மோகன் சர்மாவின் உயிரின் மீது “தாழ்ந்தவர் ” என்ற ” டேகையும் ” இறைவன் கட்டி அனுப்பியிருந்தானா?

பயங்கரவாதிகளை கொன்றதற்கு முலயாமும், மாயாவதியும் மனித உரிமை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரவித்தனர்–இது புதுவகையான போலி என்கவுண்டர் என்றனர்..தில்லி ஹைகொர்ட்டூம், வழக்கை ஏற்று 21.5.2009 அன்று
மனிதஉரிமை கமிஷனுக்கு விசாரிக்க அனுப்பியது..

மனித உரிமை கமிஷனும் 22.7.2009 இல் “இது போலி என்கவுண்டர் அல்ல ” மனித உரிமை மீறல் இல்லை ” கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள்தான் ” என தீர்ப்பு கூறியது.

ஒருவேளை ராஹுல் காந்தி–இது போலி என்கவுண்டர் என நினைத்து இன்ஸ்பெக்டர் மோகன் சந்த சர்மாவின் வீட்டிற்கு போகாமல் இருந்திருந்தாலும் மனித உரிமை கமிஷனின் ” கிளீன் சிட்டிற்கு ” பிறகாவது சென்றுரிக்க வேண்டுமல்லவா? ..

ஏன் போகவில்லை என்று மண்டையை குழப்பவேண்டாம் ..

காங்கிரசின் கணக்கில் உயிர்களின் மதிப்பில் பல்வேறு விலையும்— வேறுபாடுகளும் உண்டு ..அது ஓட்டின் மதிப்பை பொறுத்தது..
புரிந்ததா ?

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்   மாநிலப் பொருளாளர்–பாஜக

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...