இந்திய பகுதிகள் குறித்த வரைபடங்களை சட்ட விரோதமாக சேகரித்து வைத்துள்ள கூகுள் நிறுவனத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தருண் விஜய் மேலும் தெரிவித்ததாவது:
கூகுள் மேப்பத்தான் 2013 எனும் வரைபடப் போட்டியை கூகுள் அறிவித்துள்ளது. தங்கள்பகுதி சார்ந்த வரைபட விவரங்களை தரும்படி இப்போட்டியின் மூலம் தனது வாடிக்கையாளர்களை கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவின் ஒவ்வொரு அங்குலத் தையும், சட்ட விரோதமாக வரைபடமாக சேகரிக்கும் கூகுளின் இந்தசெயல், நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கும் .
கூகுள் நிறுவனத்தின் வரை படம் தொடர்பான நடவடிக்கைகள், தேசிய வரைபட விதி முறைகளையும், பாதுகாப்பு அமைச்சகத்தின் வரைபடம் தொடர்பான நெறிமுறைகளையும் மீறுவதாக இருக்கிறது .
கூகுள் நிறுவனத்தை கட்டுப் படுத்துவதுடன், அனுமதியின்றி வரைபடத் தயாரிப்பில் ஈடுபட்ட அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்றார் தருண் விஜய்.
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.