ஸ்ரீராம நாம ஜப யோக வேள்வியை பொன். ராதாகிருஷ்ணன் மதுரையில் தொடங்கி வைத்தார்

ஸ்ரீராம நாம ஜப யோக வேள்வியை பொன். ராதாகிருஷ்ணன் மதுரையில் தொடங்கி வைத்தார் அயோத்தியில் ராமர்கோயில் அமைய ஸ்ரீராம நாம ஜப யோக வேள்வியை பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மதுரையில் தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்ட விஷ்வ இந்து பரிஷத்தின் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் அமைய ஸ்ரீராம நாம ஜபயோக வேள்வி நேற்றிரவு தொடங்கப்பட்டது . பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த ஜபவேள்வியை தொடங்கி வைத்தார். திருவேடகம் ராமகிருஷ்ண தபோவன சுவாமி நியமானந்தா இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

பிறகு இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: அயோத்தியில் ராமர்கோயில் கட்ட வேண்டும் என்ற இந்துக்களின் உணர்வு களுக்கு ஏற்றவாறு, இந்து துறவிகளின் வேண்டு கோளின்படி இந்தவேள்வி தொடங்கப்பட்டுள்ளது . நகரம், கிராமம், வீடு, கோயில் என்று அனைத்து இடங்களிலும் நாடுமுழுவதும் உள்ள மக்கள் இந்த ராம நாம ஜெபத்தில் மே 13ம்தேதி வரை ஈடுபடுவர்.

கூட்டாகவோ, தனியாகவோ, ஒவ்வொருவரும் ராமர்கோயில் அமைய வலியுறுத்தி இந்த ராம நாம ஜெபத்தை வேண்டும் போதெல்லாம் உச்சரித்த படி இருப்பர். இதன்தொடர்ச்சியாக ஏப்.19ம் மாலை 6 முதல் 7 மணிவரை ஒரேநேரத்தில் நாடெங்கும் மக்கள் விரதமிருந்து, இந்த ராம நாம ஜெபத்தை மேற்கொள்ள கேட்டு கொள்ளப் பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...