நிதிஷ் குமாரின் சான்றிதழ் தேவையில்லை

 நிதிஷ் குமாரின் சான்றிதழ் தேவையில்லை நரேந்திரமோடியின் மதச்சார்பற்ற தன்மைக்கு, நிதிஷ்குமார் சான்றிதழ் கொடுக்கவேண்டிய அவசியமில்லை என்று , பா.ஜ.க., கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து பா.ஜ.க., செய்திதொடர்பாளர், மீனாட்சிலோகி கூறியதாவது: நரேந்திர மோடியின் மதச்சார்பற்ற தன்மைக்கு, நிதிஷ்குமார் உட்பட, எவரும், சான்றிதழ் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. குஜராத்தில், கோத்ரா ரயில்எரிப்பு சம்பவம் நடந்த போது, மத்தியில், வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில், நிதிஷ்குமார், ரயில்வே அமைச்சராக இருந்தார், என்பதை மறந்து விடக்கூடாது. இன்னும், அவர், தே.ஜ.,கூட்டணியில் தொடருகிறார்.என்று மீனாட்சி லோகி கூறினார்.

பீகார் மாநில பா.ஜ.க, தலைவரும், அம்மாநில துணைமுதல்வருமான, சுஷில்குமார் மோடிகூறுகையில், கூட்டணி கட்சியைசேர்ந்த தலைவரை, ஐக்கிய ஜனதா தளம் விமர்சிப்பதை, ஏற்கமுடியாது. இது போன்ற விமர்சனங்கள், கூட்டணியை பலவீனமாக்கிவிடும், என்றார்.

பஞ்சாப் முதல்வரும், சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவருமான, பிரகாஷ்சிங் பாதல் கூறியதாவது: தே.ஜ.,கூட்டணியில், நாங்களும் அங்கம்வகிக்கிறோம். கூட்டணியில், முதன்மையான கட்சி, பா.ஜ.க தான். எனவே, பிரதமர்வேட்பாளர் தொடர்பாக, அந்தகட்சி சார்பில், எந்தமுடிவு எடுக்கப்பட்டாலும், அதை நாங்கள் ஆதரிப்போம். ஆனால், அது குறித்த முடிவை எடுப்பதற்கு முன்பு , தே.ஜ.,கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைகூட்டி, ஆலோசிக்கவேண்டும்.என்று . பிரகாஷ்சிங் பாதல் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...