ரோஷம் உள்ள எந்த ஒருகாங்கிரஸ் உறுப்பினரும் திமுக கூட்டணியை விரும்பமாட்டார்

பேரறிவாளன் விடுதலை திமுக வரவேற்றுள்ள நிலையில் காங்கிரஸ் எதிர்ப்புதெரிவித்து இன்று போராட்டம் அறிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி பாஜக கடுமையாக காங்கிரஸ் கட்சியை விமர்சனம்செய்துள்ளது. பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது கேவலம், அவமானம் என விமர்சித்துள்ள பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி மாநிலங்களவை பதவிக்காக கட்சியின் மானத்தை அடகு வைக்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வராவ், பிஆர் கவாய், ஏஎஸ்போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்ததீர்ப்பை வழங்கியது. 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்ததை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142யை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

பேரறிவாளன் உள்பட 7 பேரையும் கொலைகாரர்கள் என விமர்சனம் செய்துள்ளது. மேலும் பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழகத்தில் இன்று வாயில் வெள்ளைத்துணி கட்டி போராட்டம் நடத்த காங்கிரஸ் அழைப்புவிடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் நடைபெற உள்ளது.

பேரறிவாளன் விடுதலையை திமுக வரவேற்றுள்ள நிலையில் காங்கிரஸ்எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளது. இந்நிலையில்தான் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜகவின் துணை தலைவரான நாராயணன் திருப்பதி காங்கிரஸ்கட்சியை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

கட்சி தலைவரை கொன்ற குற்றவாளியை கொஞ்சிகுலாவும் கட்சியின் தயவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைபெறுமா காங்கிரஸ்?. காங்கிரசாரே, ராஜீவ்காந்தியை கொன்ற குற்றவாளிகளை அரவணைக்கும் திமுகவோடு கூட்டணியை தொடர்கிறீர்களே?. இது கேவலம், அவமானம். வெட்கம், மானம், ரோஷம் உள்ள எந்த ஒருகாங்கிரஸ் உறுப்பினரும் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளியின் விடுதலையை கொண்டாடும் திமுக கூட்டணியில் தொடர விரும்பமாட்டார்கள்.

மாநிலங்களவை பதவிக்காக கட்சியின் மானத்தை அடகுவைக்கலாமா? ராஜீவ் கொலை குற்றவாளியின் விடுதலையை கொண்டாடும் திமுகவுடன் இன்னும் கூட்டணியா?. கொலை குற்றவாளியை தலையில்தூக்கி வைத்து கொண்டாடு பவர்களை எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதாலும் அப்படி சொல்லி விட்டால் கூட்டணி முறிந்துபோய் விடும் என்பதாலும் தான் வாயில் துணியை கட்டிகொண்டு போராட்டமா?. அப்படியாவது எம்எல்ஏ, எம்பியாகிவிட வேண்டுமென்று அதிகார அரசியலுக்கு அலைவது ஏன்? நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு செய்யும்துரோகம் இது” என சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...