2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடில் நடந்த முறைகேடுகளை விசாரித்த, பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையில், உள்நோக்கத்துடனே , முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, இது காங்கிரஸ் அரசின் பழி வாங்கும் நடவடிக்கை’ என்று , பாஜக மூத்த தலைவர், அத்வானி பேசியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் பீஜப்பூர் மாவட்டத்தில், அத்வானி நேற்று தேர்தல்பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: அரசியல் பழிவாங்கும் நோக்கிலேயே, முன்னாள் பிரதமர், வாஜ்பாய் பெயரை, பார்லிமென்ட் கூட்டுக்குழு தலைவர், சாக்கோ, “2ஜி’ முறைகேடுகள் தொடர்பான, தன் வரைவுஅறிக்கையில் சேர்த்துள்ளார். இதன்மூலம், இந்த விசாரணையை திசைதிருப்ப முயற்சிகள் நடக்கின்றன. இந்தவிவகாரம் குறித்து பார்லிமென்டில் விவாதிக்க, பா.ஜ.க., முடிவுசெய்துள்ளது.
ஜவகர்லால்நேரு முதல், மன்மோகன்சிங் வரை பிரதமர்களில், வாஜ்பாயைபோன்ற சிறந்த பிரதமரை, இந்நாடு கண்டதில்லை. பா.ஜ.க., தலைமையிலான, தேசியஜனநாயக கூட்டணி ஆட்சியில், இமாலய ஊழல்கள் நடைபெறவில்லை; மாறாக, வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. லஞ்சம் ,ஊழல்களுடன், ஒரு போதும் பா.ஜ.க. சமரசம் செய்துகொள்ளாது.
மத்தியில், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தாலும், அவர் தனது அதிகாரத்தை முழுமையாக பயன் படுத்த முடியாதவராக உள்ளார் . அதே நேரத்தில், தேவகவுடா, குஜ்ரால், சந்திர சேகர் ஆகியோர் சிலநாட்களே பிரதமராக இருந்தாலும், அவர்களிடம் முழுஅதிகாரம் இருந்தது. என்று அத்வானி பேசினார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.