உத்தரகாண்ட் இருந்தஇடம் தெரியாமல் போன 180 கிராமங்கள்

 உத்தரகாண்ட் இருந்தஇடம் தெரியாமல் போன  180 கிராமங்கள் உத்தரகாண்ட் கனமழைக்கு ருத்ர பிரயாகை, சமோலி உள்ளிட்ட இரண்டு மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. அதிலும் குறிப்பாக கேதர் நாத், ருத்ர பிரயாகை வழித்தடம் காணாமலே பொய்விட்டது. அந்த சாலையை செப்பனிடவே இரண்டு ஆண்டுகள் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன .

கேதர்நாத், பத்ரிநாத் புனித தலங்களுக்கு செல்லும்பாதையில் உள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காட்டாற்றுவெள்ளம் போல் பல இடங்களில் தண்ணீர் கிளம்பியதில் சுமார் 180 கிராமங்கள் இருந்தஇடம் தெரியாமல் அழிந்துவிட்டன. அந்த கிராமங்களில் வசித்த பல்லாயிர கணக்கான மக்கள் என்னஆனார்கள் என்றே தெரியவில்லை. கேதர்நாத், ருத்ர பிரயாகை சாலையில் சுமார் 50 ஆயிரம்பேர் இன்னமும் தவித்தபடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேரழிவு ஏற்பட்டதும் மீட்புகுழுக்களை அனுப்பிவிட்டு மத்திய அரசு மெத்தனமாக இருந்துவிட்டது. பெருமளவில் மக்கள் பலியாகிவிட்டனர் என்று தெரிந்தபிறகே மத்திய அரசு முழு வீச்சில் இறங்கியது.

கேதர்நாத்தில் வெள்ளத்தால் அடித்துசெல்லப்பட்ட நூற்றுக் கணக்கான வீடுகள் மற்றும் வாகனங்கள் எங்கேசென்றன என்றே தெரியவில்லை. அவற்றை தேடும்பணியை தொடங்க இனி ஒருமாதமாகலாம். கேதர் நாத்தை சுற்றி சுமார் ஆயிரம்பேர் கடைகள் வைத்திருந்தனர். இவர்கள் அனைவருமே வெள்ளத்தால் அடித்து செல்லப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் கேதர் பள்ளத் தாக்குகளில் இருந்து 985 பேரை மீட்டுள்ளனர். மற்றவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...