இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே படுகொலைகள்

 இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே படுகொலைகள் இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே பா.ஜ.க தலைவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள் . முன்பெல்லாம் குண்டுவைத்து கொன்றனர். இப்போது அரிவாளால்வெட்டி கொடூரமாகக் கொல்கின்றனர் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளரும், ஆடிட்டருமான ரமேஷ் சேலத்தில் அவரது வீட்டுவாசலில் கொடூரமாக வெட்டி படுகொலைசெய்துள்ளது அதிர்ச்சி தருகிறது . இந்தப்படுகொலை கடும் கண்டனத்துக் குரியது.தமிழகத்தில் கடந்த ஓராண்டில்மட்டும் பா.ஜ.க மாநில மருத்துவ அணிச்செயலாளர் டாக்டர் அரவிந்த்ரெட்டி, இந்து முன்னணி மாநிலச்செயலாளர் வெள்ளையப்பன், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி, பரமக்குடி நகராட்சி முன்னாள்கவுன்சிலர் முருகன், ஆடிட்டர் ரமேஷ் என்று பலர் வெட்டி கொல்லப் பட்டுள்ளனர். பா.ஜ.க மூத்த தலைவர் எம்ஆர். காந்தி. மாநில துணைத்தலைவர் எச். ராஜா, ஆர்எஸ்எஸ். மாவட்டத் தலைவர் ஆனந்த். இந்து முன்னணி நிர்வாகி ஹரி, ஆர்எஸ்எஸ். முழுநேர ஊழியர் பாஸ்கர் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளனர். கடந்த ஆண்டு ரதயாத்திரையின் போது அத்வானியை கொல்ல முயற்சிநடந்தது.

இந்து அமைப்புகளின் தலைவர்களை அச்சுறுத்துவதன் மூலமாக அதன் செயல்பாடுகளை முடக்கலாம் என்ற எண்ணத்துடன் இந்த தொடர் படுகொலைகளை நடத்திவருகின்றனர். முன்பெல்லாம் குண்டுவைத்து கொன்றனர். இப்போது அரிவாளால்வெட்டி கொடூரமாகக் கொல்கின்றனர்.

ஆடிட்டர் ரமேஷ் உடலில் 17 இடங்களில் வெட்டியுள்ளனர்.ஏற்கெனவே ரமேஷின் கார் தாக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.இது போன்ற சம்பவங்களுக்கு பல்வேறுபெயர்களில் இயங்கிவரும் அடிப்படைவாத அமைப்புகளே காரணம். அவர்களை கண்டறிந்து உடனடியாக தண்டனை பெற்றுத்தரவேண்டும்.முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் தனிகவனம் செலுத்தி, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து கடும்தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எங்களின் கோரிக்கையை ஏற்று இந்தப்படுகொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுகுழு அமைக்கப்பட்டுள்ளதாக செய்திவந்துள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றி.இந்த தொடர்படுகொலைகளை கண்டித்து திங்கள்கிழமை (ஜூலை 22) முழு அடைப்புபோராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...