ஆடிட்டர் ரமேஷ் கொலைவிவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்

ஆடிட்டர் ரமேஷ் கொலைவிவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலைவிவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

சேலத்தில் கடந்த 19ஆம்தேதி ஆடிட்டர் வி.ரமேஷ் கொலைசெய்யப்பட்டார். இந்நிலையில், தமிழகத்தில் அண்மையில் நடைபெற்றுள்ள பா.ஜ.க, இந்து அமைப்பினரின் கொலைகள்குறித்து விசாரிப்பதற்காக பா.ஜ.க சார்பில் குழு அமைக்கப்பட்டது.

பாஜக.,வின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் , நிர்மலா சீதாராமன், மக்களவை உறுப்பினர் ஆனந்த்ஹெக்டே ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் சேலம் மரவனேரியில் உள்ள ஆடிட்டர் ரமேஷின் வீட்டுக்கு வியாழக் கிழமை வந்தனர். ரமேஷின் உருவப்படத்துக்கு அஞ்சலிசெலுத்திய மூவரும், அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். பிறகு , ரமேஷ் கொலைசெய்யப்பட்ட இடத்தை அவர்கள் பார்வையிட்டனர்.

தொடர்ந்து, தற்கொலைசெய்த பா.ஜ.க பெண் நிர்வாகி ராஜராஜேஸ் வரியின் வீட்டுக்கு சென்ற குழுவினர், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல்கூறினர்.

இதைதொடர்ந்து , மரவனேரியில் உள்ள ஆர்எஸ்எஸ். அலுவலகத்தில் பா.ஜ.க, ஆர்எஸ்எஸ். நிர்வாகிகளுடன் மூவரும் ஆலோசனைநடத்தினர்.

முன்னதாக, பிரகாஷ் ஜவடேகர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: ஆடிட்டர் ரமேஷின் கொலை பாஜக தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது போன்ற தாக்குதல்களில் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தும், விசாரணை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியபிறகும் அது குறித்த அறிக்கையை பா.ஜ.க மேலிடத்துக்கு வழங்குவோம். குழுவின் அறிக்கை வருகிற 29-ஆம் தேதி சமர்ப்பிக்கப் படும். மேலும், இந்தவிவகாரத்தை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்புவோம் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...