சிறுபான்மை மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்குவது போன்று ஏழை இந்துமாணவர்களுக்கும் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி பாஜக சார்பில் ஜூலை மாதத்தில் போராட்டம் நடந்துவருகிறது. இந்த ஆண்டுக்கான ஜூலை போராட்டம் பாஜக இளைஞரணி சார்பில் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது , இதில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் இந்துஇயக்க தலைவர்கள் 6பேர் கொலை செய்யப்பட்டு ள்ளனர். 19 தாக்குதல்கள் நடந்துள்ளன. இப்படி தொடர் சம்பவங்கள் நடப்பதற்கு தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் சர்வ சாதாரணமாக உலவிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் காரணம்.
தமிழகத்தில் பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலாவருகின்றனர். ஆடிட்டர் ரமேஷ் கொலை சம்பவத்திற்கு காங்., தலைவர் ஞானதேசிகன் உட்பட பல அரசியல்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 22ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக ., சார்பில் நடந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவுதந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறோம். தமிழகத்தில் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவுகிடைக்குமா, என வைகோ கேட்டார். ஆனால் அவரே போராட்டத்தைகண்டு ஆச்சரியபட்டார்.
இந்துஇயக்க தலைவர்கள் தனிப்பட்ட விஷயங்களுக்காக கொல்லப்பட்டதாக டிஜிபி. அறிக்கை வெளியிட்டுள்ளார். டிஜிபி. அறிக்கையை பாஜக ஏற்றுக்கொள்ளாது. இந்த அறிக்கையால் பயங்கரவாதிகள் மேலும் பலசெயல்களை செய்ய வாய்ப்புள்ளது.
பயங்கரவாதிகள் பாஜக .,வை குறிவைக்க காரணம், தமிழ்நாட்டில் பா.ஜ.க கிள்ளுக் கீரையாக இல்லை என்பதால்தான். பாரதீய ஜனதாவின் வளர்ச்சியால் தான் தலைவர்கள் கொல்லப்படுகிறார்கள். இப்படி கொலைசெய்தால் பாரதீய ஜனதாவினரும் ஆயுதம் ஏந்துவார்கள். அப்படிநடந்தால் பாஜக பயங்கரவாத இயக்கம் என்று மக்கள் மத்தியில் ஆக்கிவிடலாம் என்று கனவுகாண்கிறார்கள்.
பொன்.ராதாகிருஷ்ணன் வெட்டிக் கொல்லப் பட்டாலும் தமிழ்நாட்டில் பாஜக கோலோச்சும் வகையில் கட்சியினர் பணியாற்ற வேண்டும். பாஜக ஆட்சி அமைக்காமல் ஓயமாட்டோம். அடுத்த 6 மாதத்தில் கட்சி வளர்ச்சியை 15 சதவீதமாக உயர்த்திக்காட்ட தீர்மானித்துள்ளோம்.
பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெல்வதும், நரேந்திரமோடி பிரதமர் ஆவது உறுதி. நமது ஆட்சிவரும் போது நமது மாணவ-மாணவிகளுக்கும் உதவித்தொகை கிடைக்கும் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.