ஆடிட்டர் ரமேஷ் கொலை பா.ஜ.,வுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

 ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம், பா.ஜ.,வுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்,” என்று , பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

சேலம் இரும்பாலையில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில், சேலம்மாவட்ட, பா.ஜ.க., மாநகர் மற்றும் புறநகர்மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்றுகாலை நடந்தது. பா.ஜ.க, மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில், பா.ஜ.க , மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்டு பேசியதாவது:
சேலத்தில், ஆடிட்டர் ரமேஷ் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம், சேலம் மக்களிடையே மிகுந்தவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நான் ஆடிட்டர் ரமேஷ் வீட்டுக்கு செல்லும்போது, சாலையில் இருபுறத்திலும் நின்ற மக்களை பார்த்தேன். அப்போது அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை கண்டேன்.

சாதாரணமான நேரத்தில் நான் வரும்போது என்னை பார்த்து மக்கள் உற்சாகமாக கையசைத்து, அத்வானிஜி என கூப்பிடுவர். முகம் சந்தோஷத்துடன் காணப்படும். ஆனால், இன்று அந்தநிலையை காண முடியவில்லை.

ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டசம்பவம் நமக்கு விடப்பட்டுள்ள சவால். இந்தசவாலை தைரியத்துடன் ஏற்றுக்கொண்டு, கட்சி வளர்ச்சிக்காக நிர்வாகிகள் பாடுபடவேண்டும். ஒவ்வொருவரும் கட்சியை வளர்ப்பதற்கு அர்ப்பணிப்புணர்வுடன் கொண்டுசெல்ல வேண்டும்.

ஆடிட்டர் ரமேஷ் கொலைசெய்யப்பட்ட சம்பவம், பத்திரிகைகள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்காக பத்திரிகைகளுக்கு நன்றிதெரிவிக்கிறேன். சில மாதங்களில், லோக்சபாதேர்தல் வரப்போகிறது. அதற்குள் தமிழகத்தில், பா.ஜ.க., வை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்வதில் நிர்வாகிகள் அக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...