கோவையில் பதற்றம்: பாஜக நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

 கோவையில் பதற்றம்: பாஜக நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு கோயம்புத்தூரில் பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, சிறுவாணி மெயின் ரோடு காளம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் வந்தே மாதரம் தியாகு என்கின்ற தியாகராஜன்.

இவர் கோவை தொண்டாமுத்தூர் ஒன்றிய பா.ஜ.க. தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை யாரோ மர்ம மனிதர்கள் தியாகராஜன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனர். மர்ம மனிதர்கள் வீசிய பெட்ரோல் குண்டு தியாகு வீட்டின் முன்பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது. அப்போது, சத்தம் கேட்டு வீட்டில் இருந்த தியாகராஜன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

பெட்ரோல் குண்டு வீட்டின் முன்பு விழுந்து வெடித்ததால் சேதம் தவிர்க்கப்பட்டது. பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து பேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், துணை சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அங்கு கிடந்த பெட்ரோல் குண்டின் சிதறல்களை சேகரித்தனர். தியாகராஜன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவில்லை. பெட்ரோல் குண்டை வீசிச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து தியாகு வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...