காங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்

காங்கிரஸ்கட்சி ஆளும் மாநிலங்களின் அரசுகள் பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் வரியைக்குறைக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறுகாணாத வகையில் உயா்ந்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் தொடா்ந்து அவற்றின் விலையை உயா்த்திவருகின்றன. ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-கடந்துள்ளது. ராஜஸ்தானில் ஒருலிட்டா் டீசல் விலை ரூ.100-யைக் கடந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்தியஅரசு மேற்கொள்ள வேண்டுமென்று பலமாநில அரசுகள் கோரி வருகின்றன. பெட்ரோல், டீசல்மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரி வருகின்றனா். எரிபொருளை சரக்கு-சேவைவரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டுவர வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி ஆலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘எரிபொருள் விலை உயா்வுகாரணமாக மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்கிறேன். ஆனால், மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவா்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. மக்களுக்கு கரோனா தடுப்பூசியை மத்தியஅரசு இலவசமாக செலுத்தவுள்ளது. இவற்றுக்காக சுமாா் ரூ.1 லட்சம் கோடியை மத்தியஅரசு செலவிடவுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான விலைஉயா்வு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடா்ந்து கேள்வி எழுப்பிவருகிறாா். இதற்காக மத்திய அரசு மீது அவா் குற்றஞ்சாட்டி வருகிறாா். அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகியவற்றில் பெட்ரோல், டீசல்விலை ஏன் அதிகமாக உள்ளது? எரிபொருள் மீதான வரியை குறைக்குமாறு அந்த மாநிலங்களின் முதல்வா்களை அவா் வலியுறுத்தவேண்டும்‘ என்றாா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பேகாரணம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. சா்வதேச அளவில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்குத் திரும்பிவருகின்றன. அதனால், கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையும் உயா்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலையுடன் சோ்த்து மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரியும் பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

மாநிலங்கள் மதிப்புகூட்டு வரியையும் (வாட்) பெட்ரோல், டீசல் மீது விதித்து வருகின்றன. அதனால், பெட்ரோல், டீசல்விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீது அதிகபட்ச மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச வாட்வரி விதிக்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...