திக்விஜய் சிங் கீழ்த்தரமான முறையில் அரசியல்செய்கிறார்

 திக்விஜய் சிங் கீழ்த்தரமான முறையில் அரசியல்செய்கிறார் கீழ்த்தரமான முறையில் அரசியல்செய்யும், காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலர், திக்விஜய் சிங்கின் நடவடிக்கைகள் கண்டனத்திற்கு உரியவை,” என்று , பா.ஜ.க., மூத்த தலைவர்களில் ஒருவரான, ரவிசங்கர்பிரசாத் தெரிவித்துள்ளார்.

உணவுபாதுகாப்பு சட்ட மசோதா குறித்து விவாதிக்க, முதல்வர்கள் மாநாட்டை நடத்தவேண்டும் என, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, நேற்று முன்தினம், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, கடிதம் எழுதியிருந்தார். இதை கிண்டல்செய்து, காங்கிரஸ் பொதுச்செயலர்களில் ஒருவரான, திக்விஜய்சிங் கூறும்போது, ஏழைமக்கள் பயன்பெறும் எல்லா திட்டங்களையும் எதிர்ப்பதன் மூலம், அவர்கள் ஏழைகளுக்கு எதிரானவர்கள் என்பது தெளிவாகிறது. மோடிக்கு, பா.ஜ.க, பார்லிமென்ட் கட்சி உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இல்லாததால், உணவுப்பாதுகாப்பு மசோதா விவகாரத்தை, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்’ என்று , தெரிவித்திருந்தார்.

இதற்கு, ரவிசங்கர்பிரசாத், கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
பொறுப்பற்றமுறையில் அறிக்கைகள் விடுவதில், திக்விஜய்சிங் கைதேர்ந்தவர் என்பதை, இந்நாடு அறியும். உணவுபாதுகாப்பு சட்டமசோதாவில், செய்யப்படவேண்டிய திருத்தங்கள் குறித்துதான், நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார். பா.ஜ.க, ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், மதக்கலவரங்களை, பா.ஜ.க., தூண்டிவிடுவதாக, திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார். இது, அவரது சொந்தக்கருத்தா அல்லது, காங்கிரஸ் கட்சியின் கருத்தா என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்தவேண்டும். கீழ்த்தரமாக அரசியல்செய்யும், திக்விஜய் சிங்கின் நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியவை. என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.