கிலோ வெங்காயத்தை ரூ. 25க்கு விற்க பாஜக ஏற்பாடு

கிலோ வெங்காயத்தை ரூ. 25க்கு விற்க பாஜக ஏற்பாடு  வெங்காயத்தின் கடும் விலைஉயர்வால் கடும் அதிருப்தியடைந்துள்ள மக்களை தங்கள்பக்கம் இழுக்கும் நோக்கில், ஒருகிலோ வெங்காயம் ரூ. 25க்கு விற்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது.

டெல்லியில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ 80க்கு மேல் உயர்ந்துள்ளது. மக்களின் அன்றாடசமையலில் வெங்காயமும் தக்காளியும் முக்கிய இடம்பெற்றுள்ளது. வெங்காயவிலை உயர்வால் மக்கள் கடும் அதிருப்தி யடைந்துள்ளனர். இதையடுத்து, மக்களின் துயர் துடைக்க ஒரு கிலோ வெங்காயம் ரூ 25க்கு விற்க பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லி மாநில பாஜக . தலைவர் விஜய்கோயல் கூறியதாவது:வெங்காயம் மட்டுமின்றி எல்லா காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதுக்கல்பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறியதற்காக உணவுஅமைச்சர் ஹாருன் யூசுப்பை முதல்வர் டிஸ்மிஸ் செய்யவேண்டும். வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டு, இப்போது தனது கையாலாகா தனத்தை வெளிபடுத்துகிறது. வெங்காயத்தில் மட்டும் இன்றி எல்லா பிரச்னைகளிலும் முதல்வர் ஷீலாதீட்சித் இந்தபோக்கைதான் கடைபிடிக்கிறார். விலை உயர்வு, மின்கட்டணம், குடிநீர்பற்றாகுறை, அங்கீகாரமற்ற குடியிருப்புகளில் வளர்ச்சியின்மை, பெண்களுக்கு பாதுகாப்பின்மை உட்பட எல்லா பிரச்னைகளிலும் தனதுகையாலாகாத தனத்தைதான் முதல்வர் வெளிபடுத்திவருகிறார். வெங்காய விலைஉயர்வால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளதை தடுக்க கிலோ 50க்கு வெங்காய விற்பனை என்று அரசு அறிவித்துள்ளது.

ஆனால், அங்கு அழுகிய வெங்காயங்கள் தான் விற்கப்படுகின்றன. இதை சமையலுக்கு பயன்படுத்தமுடியாது. அதனால் தான் பா.ஜ.க., சார்பில் வெங்காயம் கிலோ ரூ 25க்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விலை வாசியை கட்டுப்படுத்துவது அரசின்கடமை. ஆனால் இன்று எல்லா பொருட்களின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காய உற்பத்தி சற்றுகுறைந்துள்ளது. ஆனால், இதை முன்கூட்டியே அரசு அறிந்து, சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பதுக்கல்பேர்வழிகள் பயன்படுத்தி கொள்ளவிடாமல் தடுத்திருக்கவேண்டும்.டெல்லியில் உள்ள மொத்தகொள்முதல் மார்கெட்களை அரசுதான் நிர்வகிக்கிறது. மத்திய மற்றும் மாநில காங்கிரஸ் அரசுகளின் திறமையின்மையால் ஏழை மற்றும் நடுத்தரமக்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று விஜய் கோயல் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...