தெலங்கானா அமைந்துவிட்டால் அமைதி திரும்பிவிடும்

 தெலங்கானா தனி மாநிலம் அமைவதற்கான மசோதாவை மேலும் கால தாமதம் செய்யாமல் நடப்புக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவர வேண்டும் என ஐ.மு.,கூட்டணி அரசை மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மாஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

தெலங்கானா அமைவதற்கான அறிவிப்பின் மூலம் தெலங்கானா ஆதரவுதலைவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ்கட்சி முயல்கிறது. மாறாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தனது செயலற்றதன்மை மூலம் ஒருங்கிணைந்த ஆந்திர ஆதரவு தலைவர்களின் ஆதரவை தக்கவைத்து கொள்ள முயல்கிறது.

காங்கிரஸ் மற்றும் மத்திய அரசின் வெவ்வேறானசெயல்பாடு மக்களை ஏமாற்றும் நாடகம். இந்த இரட்டைநிலைப்பாடு தெலங்கானா ஆதரவாளர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் அமைவதை பாஜக ஆதரிக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த சூழ் நிலையிலும் மாற்றம் இல்லை. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான மசோதா கொண்டுவரப்பட்டால் அதனை முழுமனதுடன் ஆதரிப்போம்.

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை செப்டம்பர் 5-ம் தேதி வரை நீட்டிக்க அரசுவிரும்புகிறது. முன்னதாக பட்டியலில் இடம்பெறாத மசோதாக்களையும் கொண்டுவரும் திட்டமும் அரசுக்கு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நடப்புக் கூட்டத்தொடரிலேயே தெலங்கானா மாநிலம் அமைவதற்கான மசோதாவை அரசு கொண்டு வரவேண்டும் என்பதே எங்களது கருத்து.

தெலங்கானாமாநிலம் அமைவது வேண்டுமென்றே கால தாமதம் செய்யப் படுகிறதோ என்ற சந்தேகமும் உள்ளது. இதற்கு காங்கிரஸ்கட்சியும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் துணை போகக்கூடாது என்பதே பா.ஜ.க.,வின் கோரிக்கை.

தெலங்கானா அமைந்துவிட்டால் ஆந்திரத்தில் படிப்படியாக அமைதி திரும்பிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...