பொருளாதார மந்தநிலைக்கு, பிரதமரே தார்மீக பொறுப்பு

 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு, பிரதமர் மன்மோகன்சிங் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகவேண்டும் என, பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க .,வின் மூத்த தலைவர் வெங்கையாநாயுடு செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முற்றிலும் செயலிழந்து முடங்கிபோய் இருக்கிறது. காங்கிரசின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியாவில் விவசாயம், தொழிற் துறை உள்பட அனைத்து துறைகளும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது . நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலைக்கு அஞ்சி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவைவிட்டு வேகமாக வெளியேறுகின்றன.

இந்திய நிறுவனங்கள்கூட வெளியேறும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. 2003-04-ம் ஆண்டு மத்தியில் பாஜக. ஆட்சியில் இருந்து வெளியேறிய போது, நாட்டின் பண வீக்கம் 3.8 சதவீதமாகவும், ஒட்டுமொத்தவளர்ச்சி 8.06 சதவீதமாகவும் இருந்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான பொருளாதாரகொள்கையால் நாட்டின் பண வீக்கம் 9 சதவீதத்திற்குமேல் அதிகரித்து உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 4.4 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த ஒரு ஆண்டில்மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதிமந்திரி பா.சிதம்பரமும் அளிக்க கூடிய விளக்கங்கள் ஏற்று கொள்ளக்கூடியதாக இல்லை. எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்கேட்டிற்கு பிரதமர் மன்மோகன் சிங் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகவேண்டும்.

பெட்ரோல்-டீசல்விலை மீண்டும் உயர்ந்து மக்களுக்கு மேலும் ஒருசுமையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பெட்ரோலியதுறை மந்திரி வீரப்ப மொய்லி மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாதவாறு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரைவில் தேர்தல்நடைபெற உள்ள மிசோரம், டெல்லி, மபி., சத்தீஷ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்முடிவில் எதிரொலிக்கும். ஈழ தமிழர்கள், தமிழக மீனவர்கள் பிரச்சினையில் தமிழர்களின் உணர்வுகளுக்கு இலங்கை அரசு மதிப்பளிக்கவேண்டும்.

தமிழகத்தில் உணவுபாதுகாப்பு மசோதா சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவுபாதுகாப்பு மசோதா தமிழக அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...