தமிழக மீனவர்கள் பிரச்னையை நாடாளுமன்றத்தில் பாஜக எழுப்பும்

 தமிழக மீனவர்கள்  பிரச்னையை நாடாளுமன்றத்தில் பாஜக எழுப்பும் இலங்கை கடற்படையினரால் தமிழகமீனவர்கள் சந்தித்து வரும் பிரச்னையை நாடாளுமன்றத்தில் பாஜக எழுப்பும் என அவரை சந்தித்த பாம்பன் மீனவர்களிடம் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.

பாம்பன் பகுதியிலும் இலங்கை கடற் படையினர் மேற்கொண்டு வரும் அட்டூழியத்தை எடுத்துரைக்க பாம்பன்பகுதியை சேர்ந்த தீவுமீனவர்கள் சங்கத்தின் ஆலோசகர் சைமன், முன்னோர்கள் நினைவு மீனவர்கள் சங்க செயலர் வில்சன், பாம்பன் மீனவர்கள் சங்கத்தின் தலைவர் சிப்பிசேசு, பாம்பன் பஞ்சாயத்து தலைவர் பேட்ரிக், பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளி தரன், தமிழக பா.ஜ.க செயலர் ஆதவன் உள்ளிட்டோர் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜை நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க் கிழமை சந்சித்துப் பேசினர்.

இந்த சந்திப்புக்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேட்ரிக் கூறியது: பாம்பன் பகுதி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச்சென்று மீன்பிடிப்பது அரிது. அவர்கள் இந்திய எல்லைக்குள் தான் மீன்பிடித்து வருகின்றனர். அவர்களை இலங்கை கடற் படையினர் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி பிடித்துச்சென்றனர்.

கடந்த 50 ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை. தற்போது ராமேசுவரம் போல் பாம்பன்பகுதியிலும் இலங்கை கடற் படையினரின் அட்டூழியம் தொடங்கியுள்ளது.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம், காரைக்கால் பகுதிகளைச்சேர்ந்த 146 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுஷ்மா ஸ்வராஜிடம் வலியுறுத்தினோம்.

இந்த விவகாரம்தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷிதிடம் கொண்டு செல்வதாகவும், நாடாளுமன்றத்தில் இந்தவிவகாரத்தை எழுப்புவதாகவும் அவர் எங்களிடம் உறுதியளித்தார் என பேட்ரிக் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...