விநாயகர் சதுர்த்தி தேசபக்தியும், தெய்வபக்தியும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு விழா

 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாஜக மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மூலப் பொருளாம் முழுமுதற் கடவுளாகிய விநாயகப்பெருமானின் சதுர்த்தி நன்னாளில் அனைவருக்கும் பாஜக.,வின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.உலகின் எப்பகுதியில் எவர் எதைதுவக்கினாலும் அத்துவக்கத்தின் உருவாக விநாயகப்பெருமான் முன்வந்து நிற்கின்றார்.ஒருநல்ல துவக்கமே நல்ல முடிவாகவும், நிறைவாகவும் அமையும் என்பதால் விநாயகரின் துணைகொண்டு துவக்கப்படும் எந்த செயலும் வெற்றிகரமாக நிறைவுபெறும் என்பது நம்நாட்டு மக்கள் பன்னெடுங் காலமாக அனுபவத்தில் கண்டுவருகிறார்கள். அத்தகு விநாயகப்பெருமானின் சதுர்த்தி விழாவீட்டு விழாவாக இருந்ததை பொதுவிழாவாக மாற்றி சுதந்திர போராட்டத்தில் நாட்டு மக்களுக்கு உணர்ச்சி கொடுப்பதற்காக மாற்றியபெருமை பாலகங்காதர திலகரையேச் சாரும்

இன்று உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்திவிழா பொதுவிழாவாக கொண்டாடப்படுகிற தென்றால் அவ்விழா தேசபக்தியும்,தெய்வபக்தியும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு விழாவாக அமைந்துள்ளது. எனவே இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை நம் நாட்டின் வருங்கால நல்லாட்சி அமைப்பதற்கான பிள்ளையார்சுழி இட்டு வணங்கி நாடும், வீடும் காக்கப்பட மக்கள் உறுதிபூண்டு உழைக்கவேண்டும். இந்த விநாயகர் சதுர்த்திவிழா அனைத்து மக்களுக்கும் நலம்சேர்ப்பதாகவும், வளம்சேர்ப்பதாகவும்,கடந்த கால துன்பங்களை நீக்கி இன்பம் குவிப்பதாகவும் அமைய பிரார்த்தித்து பாஜக.,வின் சார்பில் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...