இழப்பீடுகோரும் உரிமையை விட்டுக்குடுத்தல் அணுவிபத்து இழப்பீட்டு சட்டத்தின் 17பி பிரிவுக்கு எதிரானது

இழப்பீடுகோரும் உரிமையை விட்டுக்குடுத்தல் அணுவிபத்து இழப்பீட்டு சட்டத்தின் 17பி பிரிவுக்கு எதிரானது அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் செய்துகொள்ளும் அணுசக்தி ஒப்பந்தத்தில் இழப்பீடுகோரும் உரிமையை இந்திய அணுமின்சக்தி நிறுவனம் (என்.பி.சி.ஐ.எல்) விட்டுக் கொடுக்க வாய்ப்புள்ளதாக பாஜக. கவலைதெரிவித்துள்ளது.

ஒரு அணுமின்நிலையத்தை நடத்தும் நிறுவனம், அணுஉலைக்கான பாகங்களை சப்ளைசெய்யும் நிறுவனத்துடன் ஒப்பந்தம்செய்து கொள்ளும்போது, இழப்பீடுகோரும் உரிமையை விட்டுக்கொடுக்க முடியும் என மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக. மூத்த தலைவர் அருண்ஜேட்லி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

அணு சக்தி ஒப்பந்தத்தில் இழப்பீடுகோரும் உரிமையை விட்டுக்கொடுக்குமாறு மத்திய அரசுக்கு அணு உலைபாகங்களை சப்ளைசெய்யும் அமெரிக்க நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்துவருகின்றன. இந்த உரிமையை விட்டுக்கொடுக்குமாறு இந்திய அணுமின்சக்தி நிறுவனத்துக்கு அனுமதி தரப்பட்டால், நாட்டுவருவாயில் சமரசம்செய்யும் நடவடிக்கையாகவே அது அமையும். அவ்வாறு செய்துகொள்ளப்படும் ஒப்பந்தமானது அணுவிபத்து இழப்பீட்டு சட்டத்தின் 17பி பிரிவுக்கு எதிரானதாக இருக்கும்.

ஒரு பொதுத் துறை நிறுவனமானது வெளிநாட்டுநிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம்செய்து கொள்ளும்போது, இழப்பீடு கோரும் உரிமையை விட்டுக்கொடுத்தால் அது, அணுவிபத்து இழப்பீட்டுச் சட்டத்தை மீறும்செயல் மட்டுமின்றி, ஊழல் தடுப்புச்சட்டத்தை மீறுவதாகவும் அமையும். ஏனெனில், இதனால் அரசுவருவாய்க்கு தவறான முறையில் இழப்பு ஏற்படும்.

மக்களவையில் முதலில் அறிமுகம்செய்யப்பட்ட அணு உலை இழப்பீட்டு சட்டத்துக்கான மசோதாவில், இழப்பீடுகோரும் உரிமையை கட்டாயமாக்கும் வகையில் 17ஆவது ஷரத்து அமைந்திருந்தது. பின்னர், அந்தமசோதா நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அதன்பின், மசோதாதொடர்பாக பா.ஜ.க.,வுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது,பல்வேறு திருத்தங்களை நாங்கள் கூறினோம். அதைத்தொடர்ந்து, மசோதாவின் 17பி பிரிவு மாற்றி எழுதப்பட்டு, இழப்பீடுகோருவதற்கான வாசகம் கடுமையானதாக மாற்றப்பட்டது என்றார் அருண் ஜேட்லி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...