இழப்பீடுகோரும் உரிமையை விட்டுக்குடுத்தல் அணுவிபத்து இழப்பீட்டு சட்டத்தின் 17பி பிரிவுக்கு எதிரானது

இழப்பீடுகோரும் உரிமையை விட்டுக்குடுத்தல் அணுவிபத்து இழப்பீட்டு சட்டத்தின் 17பி பிரிவுக்கு எதிரானது அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் செய்துகொள்ளும் அணுசக்தி ஒப்பந்தத்தில் இழப்பீடுகோரும் உரிமையை இந்திய அணுமின்சக்தி நிறுவனம் (என்.பி.சி.ஐ.எல்) விட்டுக் கொடுக்க வாய்ப்புள்ளதாக பாஜக. கவலைதெரிவித்துள்ளது.

ஒரு அணுமின்நிலையத்தை நடத்தும் நிறுவனம், அணுஉலைக்கான பாகங்களை சப்ளைசெய்யும் நிறுவனத்துடன் ஒப்பந்தம்செய்து கொள்ளும்போது, இழப்பீடுகோரும் உரிமையை விட்டுக்கொடுக்க முடியும் என மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக. மூத்த தலைவர் அருண்ஜேட்லி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

அணு சக்தி ஒப்பந்தத்தில் இழப்பீடுகோரும் உரிமையை விட்டுக்கொடுக்குமாறு மத்திய அரசுக்கு அணு உலைபாகங்களை சப்ளைசெய்யும் அமெரிக்க நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்துவருகின்றன. இந்த உரிமையை விட்டுக்கொடுக்குமாறு இந்திய அணுமின்சக்தி நிறுவனத்துக்கு அனுமதி தரப்பட்டால், நாட்டுவருவாயில் சமரசம்செய்யும் நடவடிக்கையாகவே அது அமையும். அவ்வாறு செய்துகொள்ளப்படும் ஒப்பந்தமானது அணுவிபத்து இழப்பீட்டு சட்டத்தின் 17பி பிரிவுக்கு எதிரானதாக இருக்கும்.

ஒரு பொதுத் துறை நிறுவனமானது வெளிநாட்டுநிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம்செய்து கொள்ளும்போது, இழப்பீடு கோரும் உரிமையை விட்டுக்கொடுத்தால் அது, அணுவிபத்து இழப்பீட்டுச் சட்டத்தை மீறும்செயல் மட்டுமின்றி, ஊழல் தடுப்புச்சட்டத்தை மீறுவதாகவும் அமையும். ஏனெனில், இதனால் அரசுவருவாய்க்கு தவறான முறையில் இழப்பு ஏற்படும்.

மக்களவையில் முதலில் அறிமுகம்செய்யப்பட்ட அணு உலை இழப்பீட்டு சட்டத்துக்கான மசோதாவில், இழப்பீடுகோரும் உரிமையை கட்டாயமாக்கும் வகையில் 17ஆவது ஷரத்து அமைந்திருந்தது. பின்னர், அந்தமசோதா நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அதன்பின், மசோதாதொடர்பாக பா.ஜ.க.,வுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது,பல்வேறு திருத்தங்களை நாங்கள் கூறினோம். அதைத்தொடர்ந்து, மசோதாவின் 17பி பிரிவு மாற்றி எழுதப்பட்டு, இழப்பீடுகோருவதற்கான வாசகம் கடுமையானதாக மாற்றப்பட்டது என்றார் அருண் ஜேட்லி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...