குஜராத் மிகச்சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளது

 லோக்சபாதேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்று தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபுநாயுடு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் குஜராத் மிகச்சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளது என அம்மாநில முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியையும் சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நரேந்திரமோடி, சந்திரபாபுநாயுடு ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் சந்திரபாபுநாயுடு பேசுகையில், ஆந்திர மாநில முதல்வராக இருந்தபோது ஹைதராபாத் மிகப்பெரும் வளர்ச்சியை பெற்றது. 2020ஆம் ஆண்டுக்கான இலக்கை நிர்ணயித்து செயல்பட்டோம்.

அப்போது கிளிண்டன், டோனிபிளேர் என வெளிநாட்டுத் தலைவர்கள் பலரும் ஹைதராபாத் வந்தனர். அன்று ஹைதராபாத் எப்படிஇருந்ததோ இப்போது அப்படி இருக்கிறது குஜராத்.

பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியில் வேலை வாய்ப்புகள் ஏராளமாக உருவாக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ்கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு வேலைவாய்ப்புமே உருவாக்கபடவில்லை.

விலைவாசி மிகக்கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் சாமானியமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது. டெல்லி மருத்துவ மாணவி விவகாரம் ஒன்றே அதற்குசாட்சி. உத்தர்காண்ட் வெள்ளத்தின்போது நானும் குஜராத் முதல்வர் மோடியும் அங்குசென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டோம். ஆனால் அம்மாநில அரசு சரியாக செயல் படவில்லை.

தண்டனைபெற்ற எம்பி.,எம்எல்ஏக்களைப் பாதுகாக்கும் விவகாரத்தில் ராகுல்காந்தி கருத்து தெரிவித்திருப்பதும் இன்று பிரதமரைபோய் சந்திப்பதும் திட்டமிட்ட நாடகமே

2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல்வருகிறது. இதுதான் நமக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பம். இந்தியா வல்லரசு ஆகும்நாள் வெகுதொலைவில் இல்லை.. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை வல்லர சாக்குவோம்.

வரும்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தாவிட்டால் பாதிப்பு நமக்கு தான். அதனால் காங்கிரஸை வீழ்த்தவேண்டும் என்று அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...