குஜராத் மிகச்சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளது

 லோக்சபாதேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்று தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபுநாயுடு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் குஜராத் மிகச்சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளது என அம்மாநில முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியையும் சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நரேந்திரமோடி, சந்திரபாபுநாயுடு ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் சந்திரபாபுநாயுடு பேசுகையில், ஆந்திர மாநில முதல்வராக இருந்தபோது ஹைதராபாத் மிகப்பெரும் வளர்ச்சியை பெற்றது. 2020ஆம் ஆண்டுக்கான இலக்கை நிர்ணயித்து செயல்பட்டோம்.

அப்போது கிளிண்டன், டோனிபிளேர் என வெளிநாட்டுத் தலைவர்கள் பலரும் ஹைதராபாத் வந்தனர். அன்று ஹைதராபாத் எப்படிஇருந்ததோ இப்போது அப்படி இருக்கிறது குஜராத்.

பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியில் வேலை வாய்ப்புகள் ஏராளமாக உருவாக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ்கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு வேலைவாய்ப்புமே உருவாக்கபடவில்லை.

விலைவாசி மிகக்கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் சாமானியமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது. டெல்லி மருத்துவ மாணவி விவகாரம் ஒன்றே அதற்குசாட்சி. உத்தர்காண்ட் வெள்ளத்தின்போது நானும் குஜராத் முதல்வர் மோடியும் அங்குசென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டோம். ஆனால் அம்மாநில அரசு சரியாக செயல் படவில்லை.

தண்டனைபெற்ற எம்பி.,எம்எல்ஏக்களைப் பாதுகாக்கும் விவகாரத்தில் ராகுல்காந்தி கருத்து தெரிவித்திருப்பதும் இன்று பிரதமரைபோய் சந்திப்பதும் திட்டமிட்ட நாடகமே

2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல்வருகிறது. இதுதான் நமக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பம். இந்தியா வல்லரசு ஆகும்நாள் வெகுதொலைவில் இல்லை.. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை வல்லர சாக்குவோம்.

வரும்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தாவிட்டால் பாதிப்பு நமக்கு தான். அதனால் காங்கிரஸை வீழ்த்தவேண்டும் என்று அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...