90 கோடி மக்களை பிசைக்காரகலாக மாற்றியதிலும் பெருமை

 90 கோடி மக்களை பிசைக்காரகலாக மாற்றியதிலும் பெருமை மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, குஜராத்தின் கடன்சுமை அதிகம். ஆனால், எதற்கெடுத்தாலும், குஜராத்தின் வளர்ச்சியை பாருங்கள் என்று , பா.ஜ.க ,வினர் தம்பட்டம் அடிக்கின்றனர்' என்று காங்கிரஸ் பொதுச்செயலர், திக்குவாய் சிங், 'டுவிட்டர்' வலை தளத்தில் எழுதியிருக்கிறார்.

திக்குவாய் சிங், மகாபாரதம் படித்திருப்பாரா என்று நமக்குதெரியாது. படித்திருந்தால், நாம் சொல்லும் சம்பவத்தை நினைவுகூர்ந்து, தெளிவுபெறட்டும். இல்லையென்றால், இங்கு, தமிழக காங்கிரஸ் கட்சியில், கோலோச்சிக் கொண்டிருக்கும் பெருந்தனக்காரர்கள், அவருக்கு, இதை, இந்தியில் மொழிபெயர்த்துக் கூறி, பித்தம்தெளிய வைக்கட்டும்.

என்னதான் பாண்டவர்கள் ஐவரோடு, ஆறாவதாக கண்ணனும் கூடவே ஒட்டி கொண்டிருந்தாலும், அவர்களில் யாருக்காவது, எதற்காகவாவது, கர்வம் தலைதூக்கினால், அந்தகர்வத்தை, சம்மட்டியால் ஓங்கியடித்து, இயல்புக்கு கொண்டுவருவது, கண்ணனின் வழக்கம்.

 90 கோடி மக்களை பிசைக்காரகலாக மாற்றியதிலும் பெருமை

ராஜசூய யாகம் செய்தவுடன், தர்மருக்கு, மனதில் உலகில் நம்மைவிட உயர்ந்தவர் யாரும் இல்லையென்பதாய், ஒருகர்வம் தலை தூக்கியது. (உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றிய நாள் முதல், காங்கிரசாருக்கும், இதேபோன்ற கர்வம், மனதில் குடியிருந்து வருகிறது.) கர்வம் தோன்றியவுடன், அதைஅடக்குவது, கண்ணனின் வழக்கமல்லவா?

ஒரு நாள், தர்மரிடம், 'வா! ஒரு, 'பார்ட்டி'யை பார்த்துவரலாம்' என்று அழைத்து செல்கிறார். இருவரும் பாதாளலோகம் சென்று, அங்கு, மகாபலி சக்ரவர்த்தியை சந்திக்கின்றனர். தர்மருக்கு, மகாபலியை தெரியாது; மகாபலிக்கும், தர்மரைதெரியாது. கண்ணனும், மகாபலியும், மாட்லாடி கொண்டிருக்க, தர்மர், ஒருபக்கமாய் தேமேயென அமர்ந்திருக்கிறார்.

புறப்படும்நேரம் வந்ததும், கண்ணனிடம் மகாபலி, 'ஆமாம், இவர்யாரென்று சொல்லவில்லையே…' என, கொக்கிபோடுகிறார்.கண்ணனும் திடுக்கிட்டது போல் நடித்து, 'அட… ஆமாம்ல! ஸாரிஸாரி… இவர், மாபெரும் சக்கரவர்த்தி. தர்மர்ன்னுபேரு. ராஜசூய யாகம்லாம் செஞ்சிருக்காரு.

'டெய்லி' 8,000 பிராமின்சுக்கு, 'லஞ்ச்' புரைவைட் பண்ணிட்டுத்தான் சாப்பிடுவார்ன்னா பார்த்துக்கோங்க' என, 'இன்ட்ரோ' கொடுக்கிறார். அதைக் கேட்ட மகாபலி, சட்டென்று முகத்தைத்திருப்பி, 'என்னது… டெய்லி 8,000 பேரை, இவனோடு சோத்துக்காக காக்கவெச்சிருக்குற இவன்லாம் ஒருசக்கரவர்த்தியா? இந்த லட்சணத்துல, இவனுக்கு ராஜசூய யாகம் ஒருகேடா… கண்ணா, இவனை பாத்தாலே, எனக்கு பத்திட்டுவருகிறது. உடனே இங்கேயிருந்து அழைத்துச்செல்…' என்று சொல்ல, அங்கே விழுகிறது, தர்மனின் கர்வத்துக்கு சம்மட்டிஅடி.

நாட்டிலுள்ள மக்கள்தொகை, 120 கோடியில், 90 கோடிபேரை (சரியாக, 75 சதவீதம்)  உணவுபாதுகாப்பு திட்டத்தின் கீழ், உழலவைத்துள்ள காங்கிரசுக்கு, மோடி குறித்தும், குஜராத் மாநிலகடன் குறித்தும் பேச கொஞ்சமாவது யோக்யதை இருக்கிறதா?

அறுபது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், 90 கோடிபேரை, அரசின் சோற்றுப்பாதுகாப்பு திட்டத்தின்கீழ் கொண்டு வந்துள்ள, சரித்திரசாதனையை, காங்கிரசைதவிர, வேறு எந்த கட்சியாலும் சாதிக்கமுடியாது; முடியவே முடியாது. இந்த, 'ரிகார்டை' கின்னசுக்கு எழுதிப்போடலாம். உலக வங்கிகளில், இந்தியர்களின் தன்மானத்தை, தலையை அடகுவைத்து, காங்கிரஸ் வாங்கிக் குவித்துள்ள கடன்தொகை எத்தனை லட்சம் என, சொல்வாரா திக்குவாய்சிங்?

இந்த லட்சணத்தில், உணவுபாதுகாப்பு மசோதா ஓட்டெடுப்பின் போது, ஓட்டுப்போட முடியாமல் போனதற்கு, குமுறிகுமுறி அழுதாராம் சோனியா. நல்லா காட்டுறாங்கப்பா!' பிலிமு!!

சுவிஸ் வங்கியில் உறங்கி கொண்டிருக்கும், இந்தியர்களின் கறுப்புப்பணத்தை, அந்த நாடே, 'வித்ட்ரா' பண்ணி கணக்கை முடித்துக்கொடுத்தாலும், அதை, இந்தியாவுக்கு கொண்டுவராமல், வேறு எந்தநாட்டிலாவது முதலீடுசெய்ய முடியுமா என யோசிக்கும் காங்கிரசுக்கு, மோடியையும், பாஜக.,வையும் குறைகூற அருகதை உண்டா? !!

வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கறதுனு, இதை, இதைத்தான் பெரியவங்க சொல்வாங்க.

காங்கிரஸ் கயவர்களை வேரறுப்போம்
பாஜகவை அரியனையில் ஏற்றுவோம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...