ஸ்பெக்ட்ரம் ஊழல் திமுக,வை பிரபலபடுத்திவிட்டது; நிதின் கட்காரி

தமிழக பாரதிய ஜனதா சார்பாக ஏழை இந்து-மாணவர்களுக்கும், சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவது போன்று கல்வி உதவிதொகை வழங்க பட வேண்டும். கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த-நவம்பர் மாதம் தாமரை யாத்திரை தொடங்கியது.

மாநில-தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் தமிழகம் முழுவதும் இரண்டு மாத காலமாக தாமரை யாத்திரை நடைபெற்றது . 31மாவட்டங்களில் 6 லட்சம் மக்களை சந்தித்து பிரசாரம்செய்தனர். தாமரை யாத்திரையின் நிறைவு விழா சென்னை மீனம்பாக்கம் ராணுவமைதானத்தில் இன்று நடைபெற்றது .

மாநில-தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தாமரை யாத்திரையை காலை 11 மணி வாக்கில் நிறைவு செய்தார், அதை தொடர்ந்து சென்னை போராட்டம் என்ற பெயரில் மிக பிரமாண்டமான பொது கூட்டம் நடைபெற்றது .

இதில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டனர். எதிர்பார்த்ததை விட அதிகஅளவில் தொண்டர்கள் வந்ததால் ராணுவ-மைதானம் நிரம்பி வழிந்தது. சென்னை போராட்டத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி சிறப்புரை ஆற்றினார்.

இதில் நிதின் கட்காரி பேசியதாவது ;

  தமிழகத்தில் விலைவாசி உயர்வும், ஊழலும், தான் முக்கிய பிரச்னை , ஸ்பெக்ட்ரம் ஊழல் திமுக,வை பிரபலபடுத்திவிட்டது. விலைவாசி உயர்வு பொது மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த 2010 -ம் ஆண்டு ஊழல் ஆண்டாக சென்றுள்ளது.ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த், என்று ஊழல் பட்டியல் நீண்டுகொண்டு இருக்கிறது . இரண்டரை லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது . இது நாட்டின் மொத்த-உள்நாட்டு உற்பத்தியில் 3சதவீதம்.

சுப்ரீம் கோர்ட்டு, எதிர்க்கட்சி மற்றும் பொதுமக்களும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, 22 லட்சம்கோடி டாலர் கருப்புபணத்தை மீட்க வேண்டும் என கூறுகின்றன. ஆனால், கருப்புபணத்தை குவித்து வைத்துள்ளவர்களின் பட்டியலை காங்கிரஸ் அரசு வெளியிடாமல், அவர்கள் மீது அன்பு செலுத்துகிறது. தேச துரோகிகளுக்கு இந்த அரசு துணை போகிறது.

தமிழகத்தில் மட்டும் அல்ல வெகுவிரைவில் மத்தியிலும் தேர்தல் நடைபெறும் . பாரதிய ஜனதா தலைமையில் ஆட்சி ஏற்படும். அப்போது கருப்பு பணத்தை மீட்டு, அதில் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம் .

இலங்கை தமிழர்-பிரச்னை ஒரு தேசிய பிரச்னையாகும் . இலங்கை தமிழர்களின் அடிப்படை உரிமையை பெற, பார்லிமென்ட்டில் பாரதிய ஜனதா,வின் 165 எம்.பி.,க்களும் குரல் கொடுப்பார்கள். ஐ.நா சபை உரிமைகுழுவிற்கு இந்த பிரச்னை கொண்டு செல்வோம். நாட்டின் பொருளாதார சூழ்நிலை உயர, நதிநீர் பிரச்னை தீர, ஏழை மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற தமிழக மக்கள் பா.ஜ.,விற்கு முழு ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்

{qtube vid:=7zW_DubtVws} =======================================================

{qtube vid:=ESWQvwnpw6I}

=======================================================

{qtube vid:=HGB7ZW-KkJU}

======================================================

 

{qtube vid:=iMAB9vDPQ3o}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...