370 ஆவது பிரிவுதொடர்பாக அறிவுப்பூர்வமான விவாதம் நடத்தப்படவேண்டும்

370 ஆவது பிரிவுதொடர்பாக அறிவுப்பூர்வமான விவாதம் நடத்தப்படவேண்டும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 ஆவது பிரிவுதொடர்பாக அறிவுப்பூர்வமான விவாதம் நடத்தப்படவேண்டும் என பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

நரேந்திரமோடி டுவிட்டர் இணையளத்தில் திங்கள் கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

அரசியலமைப்பு சட்டத்தின் 370 ஆவது பிரிவுதொடர்பாகவும், காஷ்மீர் பண்டிட்டுகளின் துன்பம் உள்பட இந்தமாநிலம் தொடர்பான மற்றவிவகாரங்கள் தொடர்பாகவும் அறிவுப் பூர்வமான விவாதம் நடத்தப்பட வேண்டும். ஜம்முகாஷ்மீரில் பல்வேறு சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பத்தின்காயம் இன்னமும் நம் இதயத்தில் இருக்கிறது. மக்களைப் பிளவு படுத்துவதற்கு பதிலாக ஒன்றுபடுத்துவது குறித்து நாம் பேசவேண்டும்.

பல ஆண்டுகளாக காஷ்மீர்பண்டிட்டுகள் அனுபவித்து வரும் துன்பங்களை யாரும் அலட்சியப்படுத்த கூடாது. இந்தச்சமூகத்துக்கு நீதிகிடைக்கச் செய்வதற்காக பாடுபடுவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம்.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரபட்சமான அணுகு முறையை அருண் ஜேட்லி வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இதுபோன்ற அணுகுமுறைக்கு சட்டத்தில் இடமில்லை. பூமியில் ஒருசொர்க்கம் இருந்தால் அது ஜம்மு காஷ்மீர்தான் என சொல்வார்கள். இந்தமாநிலத்தை அமைதி, ஒருமைப்பாடு ஆகியவற்றின் சொர்க்கமாக மாற்ற நாம் அனைவரும் பாடுபடவேண்டியுள்ளது என்று தனது டுவிட்டர் பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...