காங்கிரஸ் மக்களவைத் தேர்லிலும் இரு இலக்கங்களுடன் படு தோல்வியடையும்

 சமீபத்தில் நடந்து முடிந்த நான்குமாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததை போன்று மக்களவைத் தேர்லிலும் இரு இலக்கங்களுடன் தோல்வியடையும் என்று பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

டெல்லி, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்கட்சி தோல்வியை தழுவியது.

இது குறித்து அத்வானி தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

“சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றதேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்காளர்களை விலைக்குவாங்க முயன்றது. குறிப்பாக, ராஜஸ்தான் தேர்தலுக்கு முன் வாக்காளர்களைக்கவர பல திட்டங்கள் போடப்பட்டன. ஆனால், அவசர நிலை கால கட்டத்திற்கு பின், சட்டமன்றதேர்தலில் அக்கட்சிக்கு ஏற்பட்ட மிகமோசமான தோல்வி இதுவே ஆகும்.

வரும் 2014 மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ்கட்சி இரு இலக்கங்களில் வாக்குகள் பெற்றால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று என் முந்தைய வலைப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

முக்கியமான சட்டமன்றதேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் சோனியாகாந்தி-மன்மோகன்சிங் அரசின் தலைவிதி தீர்மானிப்பதில் அதிமுக்கியபங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் அவரசநிலை கால கட்டத்திற்கு பின் நடந்த தேர்தலைப்போலவே தான், நடக்கவிருக்கும் மக்களவைதேர்தலிலும் தோல்வியை சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...