குடும்ப பாரம்பரியம் மட்டுமே ராகுல்காந்தியின் தகுதி

 பிரதமர்பதவி வகிப்பதற்கு குடும்ப பாரம்பரியம் மட்டுமே ராகுல்காந்திக்கு தகுதியாக உள்ளது என பாஜக.வின் மூத்த தலைவர் வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராகுல்காந்தியின் சான்றுகளை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.குடும்ப பாரம்பரியத்தைத்தவிர, அந்த உயர்வான சான்றுகள் எவை என்று அவர் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.பிரதமர் மன்மோகன்சிங் தனது ஓய்வை அறிவிக்கவே தேவையில்லை. ஏற்கெனவே, வரும்மக்களவை தேர்தலுடன் காங்கிரசுக்கு ஓய்வுகொடுக்க மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.

இதற்கான செய்தியை கடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அழுத்தமாகவும், தெளிவாகவும் தெரிவித்து விட்டது. மோடி பிரதமரானால் நாடு அழிந்துபோகும் என்று மன்மோகன் கூறியுள்ளார். ஆம்! நரேந்திர மோடி காங்கிரஸை அழிக்கப்போகிறார். ஊழல் நிறைந்த அரசின் மிகவும் திறமையற்ற, பலவீனமான மற்றும் மென்மையானபோக்கை கடைபிடிப்பவர், அனைத்து வகையிலும் இந்தியாவை இருண்டபாதைக்கு இட்டுச்சென்றவர் என்று மன்மோகன்சிங் மதிப்பிடப்பட்டு வருகிறார்.

நாட்டில் வளர்ச்சி விகிதக்குறைவு, விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலைவாய்ப்பு மற்றும் வேளாண்மை, உற்பத்தி ஆகியவற்றில் பின்னடைவு, அண்டை நாடுகளிடம் பகைஉணர்வு ஆகியவற்றுக்கு மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே காரணம் என்றார் வெங்கையா நாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...