வீரபத்ர சிங்குக்கு எதிராக முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்ய யாருக்கும் தைரியம் இல்லை

 இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங்குக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்ட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் தொடர்ந்து மௌனம் சாதிப்பது ஏன்?, வீரபத்ர சிங்குக்கு எதிராக முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்யவோ, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவோ யாருக்கும் தைரியம்இல்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜேட்லி கேள்வி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அருண் ஜேட்லி மேலும் தெரிவித்திருப்பதாவது:

காங்கிரஸ் கட்சியும், வீரபத்ரசிங்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க பார்க்கின்றனர். அதற்குப் பின்னால் சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் அமைதியாக ஒளிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். வீரபத்ர சிங்குக்கு எதிராக முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்யவோ, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவோ யாருக்கும் தைரியம்இல்லை.

இது தொடர்பாக முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்யும்படி சி.பி.ஐ இயக்குநருக்கு டிசம்பர் 29ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

தில்லி சிறப்புபோலீஸ் சட்டப் பிரிவு 6ன்படி இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மாநில அரசின் அனுமதி தேவை எனக் கூறப்படுகிறது.

எனவே, இமாசலப்பிரதேச அரசு அனுமதி கொடுத்தால், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நடக்கும். அனுமதிகொடுக்க மாநில அரசுக்கு தைரியம் உள்ளதா? என்று அருண்ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...