வீரபத்ர சிங்குக்கு எதிராக முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்ய யாருக்கும் தைரியம் இல்லை

 இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங்குக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்ட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் தொடர்ந்து மௌனம் சாதிப்பது ஏன்?, வீரபத்ர சிங்குக்கு எதிராக முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்யவோ, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவோ யாருக்கும் தைரியம்இல்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜேட்லி கேள்வி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அருண் ஜேட்லி மேலும் தெரிவித்திருப்பதாவது:

காங்கிரஸ் கட்சியும், வீரபத்ரசிங்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க பார்க்கின்றனர். அதற்குப் பின்னால் சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் அமைதியாக ஒளிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். வீரபத்ர சிங்குக்கு எதிராக முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்யவோ, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவோ யாருக்கும் தைரியம்இல்லை.

இது தொடர்பாக முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்யும்படி சி.பி.ஐ இயக்குநருக்கு டிசம்பர் 29ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

தில்லி சிறப்புபோலீஸ் சட்டப் பிரிவு 6ன்படி இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மாநில அரசின் அனுமதி தேவை எனக் கூறப்படுகிறது.

எனவே, இமாசலப்பிரதேச அரசு அனுமதி கொடுத்தால், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நடக்கும். அனுமதிகொடுக்க மாநில அரசுக்கு தைரியம் உள்ளதா? என்று அருண்ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...