பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி விலகவேண்டும்

 நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் , சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரைதவிர வேறு யார் இதற்கு பொறுப்பேற்கமுடியும் என்றும் பா.ஜ.க கேள்வி எழுப்பியுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தவறுகள் நடந்துள்ளது உண்மை தான் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சுரங்க ஒதுக்கீட்டில் தவறுகள் நடந்திருக்கலாம் என்று கூறினார். சுரங்க ஒதுக்கீடுகள் நல்லெண்ண அடிப்படையிலேயே நடைபெற்றதாக கூறியஅவர், சிலமுடிவுகள் தவறாகி விட்டதாக தெரிவித்தார். இன்னும் தீவிரகண்காணிப்புடன் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை செயல்படுத்தியிருந்தால், தவறுகளை தடுத்து இருக்கலாம் என்றும் அரசின் தலைமைவழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் பதவியிலிருந்து உடனடியாக விலகவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. முறைகேடு நிகழ்ந்த காலத்தில் நிலக்கரி அமைச்சகத்தை மன்மோகன்சிங் கவனித்து வந்ததால் தவறுக்கு பொறுப்பேற்று அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் பாஜக கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரைதவிர வேறு யார் இதற்கு பொறுப்பேற்கமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் ஒப்புதல்மூலம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பாஜக கூறிவந்த குற்றச்சாட்டு உறுதிபடுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தவிவகாரத்தில் கோடிக் கணக்கான ரூபாய் முறைகேடாக பரிமாறப்பட்டுள்ளது தெரிந்தும் சி.பி.ஐ அமைதிகாப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.