பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி விலகவேண்டும்

 நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் , சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரைதவிர வேறு யார் இதற்கு பொறுப்பேற்கமுடியும் என்றும் பா.ஜ.க கேள்வி எழுப்பியுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தவறுகள் நடந்துள்ளது உண்மை தான் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சுரங்க ஒதுக்கீட்டில் தவறுகள் நடந்திருக்கலாம் என்று கூறினார். சுரங்க ஒதுக்கீடுகள் நல்லெண்ண அடிப்படையிலேயே நடைபெற்றதாக கூறியஅவர், சிலமுடிவுகள் தவறாகி விட்டதாக தெரிவித்தார். இன்னும் தீவிரகண்காணிப்புடன் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை செயல்படுத்தியிருந்தால், தவறுகளை தடுத்து இருக்கலாம் என்றும் அரசின் தலைமைவழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் பதவியிலிருந்து உடனடியாக விலகவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. முறைகேடு நிகழ்ந்த காலத்தில் நிலக்கரி அமைச்சகத்தை மன்மோகன்சிங் கவனித்து வந்ததால் தவறுக்கு பொறுப்பேற்று அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் பாஜக கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரைதவிர வேறு யார் இதற்கு பொறுப்பேற்கமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் ஒப்புதல்மூலம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பாஜக கூறிவந்த குற்றச்சாட்டு உறுதிபடுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தவிவகாரத்தில் கோடிக் கணக்கான ரூபாய் முறைகேடாக பரிமாறப்பட்டுள்ளது தெரிந்தும் சி.பி.ஐ அமைதிகாப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...