ராகுல் பேசினாலே போதும் மோடி வெற்றி பெற்று விடுவார்

 நரேந்திர மோடி பிரச்சாரம்செய்யவே தேவையில்லை. ராகுல் பேசினாலே, மோடி வெற்றிபெறுவார் என்று இல.கணேசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக கட்சிகளுடன் கூட்டணிகுறித்து பேசி வருகிறோம். இந்த கூட்டணியில் ஏற்கெனவே மதிமுக மற்றும் ஐஜேகே. உள்ளிட்ட கட்சிகள் இணைந்து விட்டன.

தற்போது தேமுதிக. மற்றும் பாமக. ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எங்களது கூட்டணி திமுக. மற்றும் அதிமுக. கட்சிகளுக்கு சவால் விடும் கூட்டணியாக இருக்கும். திமுக-வில் இருந்து தனது மகனான முக.அழகிரியை நீக்கியது கட்சியில் தீவிரபிரச்சினை உள்ளதை காட்டுகிறது. தேர்தல்நேரத்தில் கட்சியை பலப்படுத்த நினைப்பார்கள், ஆனால், மிகப்பெரிய பொறுப்பு வகிக்கும் தென்மண்டல பொறுப்பாளரை நீக்கியது ஏதோ உட்கட்சி பிரச்சினையாக அல்லாமல், இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

குஜராத் கலவரத்துக்கு நரேந்திரமோடி காரணம் அல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் ராகுல் இதுசம்பந்தமாக பேசுவது வேதனையாக உள்ளது.

நரேந்திரமோடி நாடுமுழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை. ராகுல் பேசினாலே மோடி வெற்றி பெறுவார். பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை நிறுத்த எந்த தகுதியும் இல்லாததால் தான், காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்துவருகிறது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...