கல்வி, ஒற்றுமை, போராட்டம்

 மக்கள் மூட நம்பிக்கைகளை எதிர்த்துப்போராட வேண்டும். குழந்தைகளுக்கு அதிகபட்சகல்வியை வழங்க வேண்டும். இந்த இரண்டும் வளர்ச்சிக்கு முக்கியம். “கல்வி, ஒற்றுமை, போராட்டம்’ என்ற அம்பேத்கரின் வார்த்தைகள் என பா.ஜ.க.,வின் பிரதமர்பதவி வேட்பாளர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

கேரளமாநிலம் கொச்சியில் தாழ்த்தப்பட்டோர் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடுசெய்த விழாவில் மோடி பேசியதாவது: நாட்டில் உள்ள அரசியல் நிகழ்வுகளை பரிசீலித்துப்பார்த்து, அடுத்த 10 ஆண்டுகள் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கானதாக இருக்கும் என்பதை நம்பிக்கையுடனும் அடக்கத்துடனும் தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் மூட நம்பிக்கைகளை எதிர்த்துப்போராட வேண்டும். குழந்தைகளுக்கு அதிகபட்சகல்வியை வழங்க வேண்டும். இந்த இரண்டும் வளர்ச்சிக்கு முக்கியம். “கல்வி, ஒற்றுமை, போராட்டம்’ என்ற அம்பேத்கரின் வார்த்தைகள் இன்றைக்கு மிகவும் பொருந்துகின்றன. நீதியைப்பெறுவது என்பது கெஞ்சிக் கேட்பதல்ல, அது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்.

நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் செய்திருக்கவேண்டிய பலபணிகள் செய்யப்படவே இல்லை. அவற்றை நிறைவேற்ற வேண்டியது என் கடமை என கருதுகிறேன். அந்த பணிகளில் ஒன்று தான், கேரள மாநிலத்தின் சமூக சீர்திருத்தவாதியான அய்யங்காளிக்கு நாடாளுமன்றத்தில் நினைவிடம் அமைப்பதாகும்.

காங்கிரஸ்கட்சி கடந்த 60 ஆண்டுகளாக பிரித்தாளும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. விஷவிதைகளை விதைத்து சமூகத்தைப் பிளவு படுத்துவதன் மூலம் ஆதாயம்பெற காங்கிரஸ் முயற்சித்து வந்துள்ளது. பா.ஜ.க ஆட்சிக்குவந்தால் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குரல் ஓங்கி ஒலிக்கும் நிலை உருவாகும் . இன்னும் 100 நாள்களில் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்படும். அதன் பின், பிரித்தாளும் முயற்சிக்கு முடிவுகட்டப்படும்.

தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு பி.ஆர்.அம்பேத்கர் அளித்த உரிமைகளை பறிக்க சதிநடக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே, ஜாதிரீதியிலான இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருமாறு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி கோரிக்கை வைத்துள்ளார்.

தாங்கள் நாட்டுக்காகவே அனைத்தையும் செய்வதாக ஒருகுடும்பம் கூறிக்கொள்கிறது. ஆனால், நாட்டு மக்களையே என் குடும்பமாக நான் நினைக்கிறேன். குஜராத் முதல்வராக பொறுப்பேற்றதும் நான் என் குடும்பமான மக்களுக்கே அனைத்தையும் செய்தேன். நான்பிறந்த குடும்பத்துக்கு எதுவும் செய்து கொள்ளவில்லை என்றார் நரேந்திர மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...