கல்வி, ஒற்றுமை, போராட்டம்

 மக்கள் மூட நம்பிக்கைகளை எதிர்த்துப்போராட வேண்டும். குழந்தைகளுக்கு அதிகபட்சகல்வியை வழங்க வேண்டும். இந்த இரண்டும் வளர்ச்சிக்கு முக்கியம். “கல்வி, ஒற்றுமை, போராட்டம்’ என்ற அம்பேத்கரின் வார்த்தைகள் என பா.ஜ.க.,வின் பிரதமர்பதவி வேட்பாளர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

கேரளமாநிலம் கொச்சியில் தாழ்த்தப்பட்டோர் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடுசெய்த விழாவில் மோடி பேசியதாவது: நாட்டில் உள்ள அரசியல் நிகழ்வுகளை பரிசீலித்துப்பார்த்து, அடுத்த 10 ஆண்டுகள் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கானதாக இருக்கும் என்பதை நம்பிக்கையுடனும் அடக்கத்துடனும் தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் மூட நம்பிக்கைகளை எதிர்த்துப்போராட வேண்டும். குழந்தைகளுக்கு அதிகபட்சகல்வியை வழங்க வேண்டும். இந்த இரண்டும் வளர்ச்சிக்கு முக்கியம். “கல்வி, ஒற்றுமை, போராட்டம்’ என்ற அம்பேத்கரின் வார்த்தைகள் இன்றைக்கு மிகவும் பொருந்துகின்றன. நீதியைப்பெறுவது என்பது கெஞ்சிக் கேட்பதல்ல, அது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்.

நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் செய்திருக்கவேண்டிய பலபணிகள் செய்யப்படவே இல்லை. அவற்றை நிறைவேற்ற வேண்டியது என் கடமை என கருதுகிறேன். அந்த பணிகளில் ஒன்று தான், கேரள மாநிலத்தின் சமூக சீர்திருத்தவாதியான அய்யங்காளிக்கு நாடாளுமன்றத்தில் நினைவிடம் அமைப்பதாகும்.

காங்கிரஸ்கட்சி கடந்த 60 ஆண்டுகளாக பிரித்தாளும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. விஷவிதைகளை விதைத்து சமூகத்தைப் பிளவு படுத்துவதன் மூலம் ஆதாயம்பெற காங்கிரஸ் முயற்சித்து வந்துள்ளது. பா.ஜ.க ஆட்சிக்குவந்தால் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குரல் ஓங்கி ஒலிக்கும் நிலை உருவாகும் . இன்னும் 100 நாள்களில் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்படும். அதன் பின், பிரித்தாளும் முயற்சிக்கு முடிவுகட்டப்படும்.

தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு பி.ஆர்.அம்பேத்கர் அளித்த உரிமைகளை பறிக்க சதிநடக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே, ஜாதிரீதியிலான இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருமாறு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி கோரிக்கை வைத்துள்ளார்.

தாங்கள் நாட்டுக்காகவே அனைத்தையும் செய்வதாக ஒருகுடும்பம் கூறிக்கொள்கிறது. ஆனால், நாட்டு மக்களையே என் குடும்பமாக நான் நினைக்கிறேன். குஜராத் முதல்வராக பொறுப்பேற்றதும் நான் என் குடும்பமான மக்களுக்கே அனைத்தையும் செய்தேன். நான்பிறந்த குடும்பத்துக்கு எதுவும் செய்து கொள்ளவில்லை என்றார் நரேந்திர மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...