மம்தாபானர்ஜி வாக்கு வங்கி அரசியலை மட்டுமே நடத்தி வருகிறார்

 மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாபானர்ஜி வாக்கு வங்கி அரசியலை மட்டுமே நடத்தி வருகிறார். இங்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது அனைத்தும் போலியானவை. தற்போது மேற்குவங்கத்தில் உண்மையான மாற்றத்தை காணும்நேரம் வந்துவிட்டது என்று பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்கம் மாநிலம் சிலிகுரியில் அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தில் பேசியது:

“மேற்கு வங்கத்தில் முதல்வராக மம்தா பதவியேற்ற பிறகு நல்லமாற்றத்தை எதிர்ப்பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால், இங்கு எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இங்கு வாக்கு வங்கி அரசியலைதான் மம்தா செய்துவருகிறார்.

மம்தாவுக்கு என்னைப்பற்றி விமர்சனம் செய்யவில்லை என்றால், சாப்பிட்ட உணவேசெரிக்காது. திரிணமூல் காங்கிரஸ் இங்கு ஆட்சி அமைத்து இரண்டுவருடங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை இங்கு ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? இங்குள்ளமக்கள் திரிணமூல் அரசால் நன்கு ஏமாற்றப்பட்டுள்ளனர். இங்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது அனைத்தும் போலியானவை. தற்போது மேற்குவங்கத்தில் உண்மையான மாற்றத்தை காணும்நேரம் வந்துவிட்டது.

டெல்லியில் முற்போக்கு சிந்தனை உள்ள அரசு அமைந்தால் மட்டுமே, எந்த ஒருகாரியமும் நிறைவேறும். மேற்குவங்க முதல்வர் சேற்றைவாரி வீசும்போதெல்லாம் தாமரை மலர்ந்து கொண்டே இருக்கும்.

சாரதா நிதி நிறுவனமோசடி பிரச்சினையில், திரிணமூல் கட்சி பெரும்பங்கு வகிக்கிறது. மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறைந்த நேரத்தில் பெரியமோசடிகளை திரிணமூல் அரசு செய்துள்ளது என்றால், அதிக வாய்ப்பையும் நேரத்தையும் கொடுத்தால் மக்கள் என்ன ஆவார்கள்?

திரிணமூல் கட்சிக்கு இம்முறை எந்த ஒருவாய்ப்பும் அளிக்ககூடாது. இந்த தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் தான் மக்கள் உண்மையான முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் காணமுடியும்.

காங்கிரஸுக்கு 60 ஆண்டுகளை கொடுத்தீர்கள். பா.ஜ.க.,வுக்கு 60 மாதங்களை மட்டும் தந்துபாருங்கள், உண்மையான வளர்ச்சியை மேற்குவங்கம் காணும்” என்றார் நரேந்திர மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...