கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 20-ல் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்

 நரேந்திர மோடி பிரதமரானால் நாடு வளர்ச்சிகாணும் , கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 20-ல் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

கர்நாடகவில் சனிக்கிழமை மைசூர்-குடகு தொகுதியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் பேசியதாவது:

நாட்டில் நரேந்திர மோடி அலை வீசிவருகிறது. இதனால் தேசியளவில் அதிக இடங்களில் பாஜக வெற்றிபெரும். அதிக தொகுதிகளை பிடிப்பதன் மூலம் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பிரதமர் ஆக உள்ளார். அவர் பிரதமர் ஆனால் 6 மாதங்களில் நாடு பெரும்வளர்ச்சி அடையும். இதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு தனிமதிப்பு ஏற்படும். அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்துச் செல்லும் திறமை மோதியிடம் உள்ளது. இதனால் எங்கும் மதகலவரம், ஜாதிசண்டை ஏற்படாமல் நாடு செழிப்பாக இருக்கும். கர்நாடகத்தில் பாஜகவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஷிமோகாவில் மஜத வேட்பாளர் கீதா சிவராஜ் குமார் நடிகர்களை அழைத்துவந்து பிரசாரம் செய்கிறார். அப்பகுதி மக்களும் பிரசாரத்தில் ஈடுபடும் நடிகர்களை ஆர்வமுடன் பார்க்கின்றனர். ஆனால் தங்களது வாக்குகளை பா.ஜ.க.,விற்கு அளிக்க ஆர்வமுடன் உள்ளனர். தேர்தலில் ஷிமோகாதொகுதியில் ஒருலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 20-ல் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...