பன்னிரண்டு வருட கடும் தவத்தினால் பெற்ற வளர்ச்சி என்ற வரமே மோடி அலை

 மோடி அலை 12 வருடம் குஜராத்தில் மையம் கொண்டிருந்த அலை, தொடர்ந்து நான்கு முறை குஜராத் மக்களால் அங்கிகரிக்கப்பட்ட அலை, குஜராத்திலிருந்து வெளிப்பட்டு இந்தியாவெங்கும் பல்கிப் பெருகி பரவி ஒவ்வொரு இந்தியனின் மனத்திலும் எதிர்கால இந்தியா குறித்த நம்பிக்கையை ஏற்ப்படுத்தி விட்ட அலை , இந்தியாவையும் தாண்டி குஜராத்தின் வளர்ச்சி குறித்து சர்வ தேச ஊடகங்களை பேச வைத்த எழுதவைத்த அலை. மோடி அலை .

இப்படிப்பட்ட அலை இல்லவே இல்லை , தன் கண்ணுக்கு தெரியவே இல்லை என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். இவருக்கு எதுதான் தெரிந்தது , எதைத்தான் இவர் ஒப்புக்கொண்டர். இப்படித்தான் 1.76 லட்சம் மதிப்பிலான 2G ஊழலை இல்லை என்றார், 10 லட்சம் மதிப்பிலான நிலக்கரி ஊழலை நடைபெறவே இல்லை என்றார். காமன்வெல்த் ஊழல் இல்லை என்றார் , பவன்குமார் பன்சால் நல்லவர் என்றார். இப்படி எதைத்தான் இவர் ஏற்றுக்கொண்டார், இவர் இல்லை என்று சொன்னதெல்லாம் எதிர்காலத்தில் இருக்கு என்று எதிர்மறையாக மாறியதுதான் வரலாறு, அலைகள் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறாரோ என்னவோ,

அலைகள் நமக்கு, இந்திய அரசியலுக்கு ஒன்றும் புதிதல்ல. 1977இல் இந்திரா காந்தி ஜனநாயகத்தை படுகொலை செய்ததால் காங்கிரஸ் எதிர்ப்பு அலை உண்டானது. 1984இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதால் காங்கிரஸ் அனுதாப அலை உண்டானது, 1991 இல் பாதித்தேர்தல் முடிந்த நிலையில் மீதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது துரதிர்ஷ்ட்ட வசமாக ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால் உண்டான இடைக்கால அனுதாப அலையே காங்கிரசை கறை சேர்த்தது, ஆக மொத்தத்தில் உண்டான மூன்று அலைகளில் ஒன்று காங்கிரஸ் எதிர்ப்பு அலை , மற்ற இரண்டு அனுதாப அலை.

ஆனால் மோடி அலையோ திடீர் என உருவானதன்று, அப்பழுக்கற்ற நேர்மை நிறைந்த ஒழுக்கத்துடன் கூடிய பன்னிரண்டு வருட கடும் தவத்தினால் பெற்ற வளர்ச்சி என்ற வரமே மோடி அலை.

இந்திய அரசாங்கத்தின் முக்கிய கோப்புகளையே சோனியாவின் இல்லத்தில் தேடும் மன்மோகன் சிங்கின் கண்களுக்கு இப்படிப்பட்ட மோடி அலை அகப்படவே வாய்ப்புகள் இல்லை .

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...