நான் வாரணாசியில் போட்டியிட வேண்டும் என்பது கடவுளின் விருப்பம்

 நடந்தமுடிந்த மக்களவை தேர்தலில் உ.பி., மாநிலம் வாரணாசியில் நரேந்திரமோடி போட்டியிட்டு வெற்றிபெற்றார். வெற்றிபெற்ற பின்னர் சனிக் கிழமை வாரணாசி சென்ற அவருக்கு பா.ஜ.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு அவர் ஊர்வலமாக சென்று கங்கை நதிக் கரையில் வழிபாடுசெய்தார். கங்கை நதியில், கங்கை ஆராத்தி நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய நரேந்திரமோடி கூறியதாவது:-

தேர்தலில் மிகப் பெரிய வெற்றி கிடைத்தற்கான பெருமை தொண்டர்களையே சாரும் . நான்பெற்ற வெற்றியை 126 கோடி மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இங்கு குறைந்தளவு பிரசாரம்செய்தாலும், மக்கள் மிகப் பெரிய அளவில் ஆதரித்துள்ளனர். வாரணாசி மக்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் எனது அமைதியை புரிந்துகொண்டார்கள்.

வாரணாசியில் வேட்புமனுவை தாக்கல் செய்தபோதே நான் இந்த மண்ணின் மைந்தானாக உணர தொடங்கினேன். காசியைபற்றி எனக்கு ஒரு கனவு உள்ளது. அதை வாரணாசி மக்கள் உதவியுடன்தான் பூர்த்தி செய்யமுடியும்.

நான் வாரணாசியை வளர்ச்சி பாதைக்கு எடுத்துசெல்வேன். வாரணாசியில் எந்த ஒரு தெருக்களைகூட நாங்கள் அசுத்தமாக விட்டுவிடப் போவது இல்லை. உங்கள் ஓட்டுகள் மட்டும் எனக்குதேவை இல்லை. உங்கள் ஆதரவும் தொடர்ந்து தேவை. இந்த இலக்குகளை அடையை உங்கள் ஒத்துழைப்புதேவை.

1947க்கு பிறகு பெரும்பாலான அரசாங்கம் காங்கிரசால் அமைக்கப்பட்டது. இந்ததேர்தலில் பாஜக பெரும்பானைமையாக வெற்றி பெறவைத்ததற்கு நாட்டுக்கு நன்றிசொல்ல நான் விரும்புகிறேன். இந்தமுறை காங்கிரஸ் கட்சியால் பிரதான எதிர்கட்சியாககூட இருக்க முடியவில்லை. நான் வாரணாசியில் போட்டியிட வேண்டும் என்று ராஜ்நாத் சிங்கிடம் வாதத்தில் ஈடுபடவில்லை. வாரணாசி தொகுதியில் நான் போட்டியிடுவது கடவுளின்விருப்பம். என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...