நாட்டின் 15வது பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றார். கடவுள்பெயரால் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பதவிப் பிரமாணமும் ரகசியகாப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் திறந்தவெளி அரங்கில் மாலை 6 மணிக்கு பதவியேற்புவிழா நடைபெற்றது. மோடி பதவியேற்பு விழா நடைபெற்ற குடியரசுத் தலைவர் மாளிகையைச்சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது 16வது லோக் சபா தேர்தலில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து லோக் சபா பாஜக தலைவராக(பிரதமர்) மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழா இன்று (திங்கட்கிழமை) டெல்லி ஜனாதிபதி மாளிகையில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார் கடவுள் பெயரால் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இதனையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையின் திறந்தவெளி முற்றத்தில் 4000 பேர் அமர்ந்து பதவி யேற்பு நிகழ்வை காணும்வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரேநேரத்தில் முக்கிய பிரமுகர்கள் கூடியதால் தலைநகர் டெல்லி பலத்தபாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. 25,000 போலீஸார், துணை ராணுவ படையினர் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.