மக்களவை எதிர் கட்சி தலைவர் பதவி ஜூன் 4க்கு முன்பாக முடிவு செய்யப்படும்

 மக்களவை எதிர் கட்சி தலைவர் பதவியை யாருக்கு அளிப்பது என்பதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் ஜூன் 4க்கு முன்பாக முடிவு செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பிரகாஷ்ஜாவேத்கர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படு தோல்வி காரணமாக மக்களவையில் காங்கிரஸ்க்கு 44 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எதிர்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு தேவையான குறைந்த பட்ச 55 உறுப்பினர்கள் எண்ணிக்கை எந்தகட்சிக்கும் இல்லாத காரணத்தால் அந்தபதவி யாருக்காவது வழங்கப்படுமா அல்லது ராஜிவ் காந்தி பிரதமராக பதவியேற்ற காலகட்டத்தில் யாருக்கும் வழங்கப்படாததுபோல் காலியாக இருக்குமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரசைபோல் அல்லாமல் பெருந்தன்மையாக நடந்து கொள்வோம் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மக்களவை எதிர்கட்சி தலைவர் விவகாரம்குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 4ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த கூட்டதொடரில் சபாநாயகர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டவரை பிரதமரும், எதிர்கட்சி தலைவரும் அவர் இருக்கையில் அழைத்துசென்று அமர வைப்பது மரபு. இது குறித்து நாடாளுன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிரகாஷ் ஜாவேத்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜூன் 4க்கு முன்பாக எதிர்கட்சி தலைவர்பதவி குறித்து முடிவு எடுக்கப்படும் என ஜாவேத்கர் தெரிவித்தார். அநேகமாக காங்கிரஸ் கட்சிக்கே எதிர் கட்சி தலைவர் பதவி வழங்கப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிரகாஷ் ஜாவேத்கருக்கு மாநிலங்கள் அவை பொறுப்பை வெங்கய்யா நாயுடு ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.