மத்திய மந்திரி கோபிநாத் முண்டே, கடந்த 3ந் தேதி கார்விபத்தில் மரணம் அடைந்தார். அவரது இலாகா பொறுப்புகள், மத்திய சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை மந்திரி நிதின் கட்காரியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சாலைபாதுகாப்பு குறித்து நிதின் கட்காரி ஆய்வுகூட்டம் நடத்தினார். அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சாலை பாதுகாப்பு விதி முறைகள் கடுமை ஆக்கப்பட்டுள்ளன. அதில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மோட்டார் வாகன சட்டங்களின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி, புதியமசோதா ஒன்று தயாராகி வருகிறது. அது, சர்வதேசதரத்துக்கு ஏற்ப அமையும். அந்தவரைவு மசோதா, இன்னும் ஒருமாதத்துக்குள் தயாராகி விடும். ஒரு மாதத்தில் நடைபெற உள்ள தேசிய சாலைபாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் அம்மசோதா விவாதத்துக்கு வைக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியும் மாநாட்டுக்கு அழைக்கப்படுவார். அனைத்து தரப்பினரின் யோசனைகளும் மசோதாவில் சேர்க்கப்படும். அந்த கடுமையான சட்டம் அமலுக்கு வந்துவிட்டால், சாலை விபத்து மரணங்கள் குறைந்துவிடும்.
ஒருவர் போக்குவரத்து விதிகளை 3 தடவைக்குமேல் மீறினால், அவரது ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு நீக்கி வைக்கப்படும். அதன் பிறகும் விதி மீறலில் ஈடுபட்டால், உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இவையெல்லாம், புதிய மசோதாவில் சேர்க்க பரிசீலிக்கப்படுகின்றன. அனைத்து சிக்னல்களிலும் கண் காணிப்பு கேமரா பொருத்துவதும் புதிய மசோதாவில் இடம்பெற உள்ளது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற முன்னேறிய நாடுகளில் உள்ள அம்சங்கள், மசோதாவில் இடம்பெறும். இதற்காக, ஓரிருநாளில் இங்கிலாந்து தூதரை சந்திக்கப்போகிறேன். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.