சாலை பாதுகாப்பு விதி முறைகள் கடுமை ஆக்கப்பட்டும்

 மத்திய மந்திரி கோபிநாத் முண்டே, கடந்த 3ந் தேதி கார்விபத்தில் மரணம் அடைந்தார். அவரது இலாகா பொறுப்புகள், மத்திய சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை மந்திரி நிதின் கட்காரியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சாலைபாதுகாப்பு குறித்து நிதின் கட்காரி ஆய்வுகூட்டம் நடத்தினார். அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சாலை பாதுகாப்பு விதி முறைகள் கடுமை ஆக்கப்பட்டுள்ளன. அதில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மோட்டார் வாகன சட்டங்களின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி, புதியமசோதா ஒன்று தயாராகி வருகிறது. அது, சர்வதேசதரத்துக்கு ஏற்ப அமையும். அந்தவரைவு மசோதா, இன்னும் ஒருமாதத்துக்குள் தயாராகி விடும். ஒரு மாதத்தில் நடைபெற உள்ள தேசிய சாலைபாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் அம்மசோதா விவாதத்துக்கு வைக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியும் மாநாட்டுக்கு அழைக்கப்படுவார். அனைத்து தரப்பினரின் யோசனைகளும் மசோதாவில் சேர்க்கப்படும். அந்த கடுமையான சட்டம் அமலுக்கு வந்துவிட்டால், சாலை விபத்து மரணங்கள் குறைந்துவிடும்.

ஒருவர் போக்குவரத்து விதிகளை 3 தடவைக்குமேல் மீறினால், அவரது ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு நீக்கி வைக்கப்படும். அதன் பிறகும் விதி மீறலில் ஈடுபட்டால், உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இவையெல்லாம், புதிய மசோதாவில் சேர்க்க பரிசீலிக்கப்படுகின்றன. அனைத்து சிக்னல்களிலும் கண் காணிப்பு கேமரா பொருத்துவதும் புதிய மசோதாவில் இடம்பெற உள்ளது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற முன்னேறிய நாடுகளில் உள்ள அம்சங்கள், மசோதாவில் இடம்பெறும். இதற்காக, ஓரிருநாளில் இங்கிலாந்து தூதரை சந்திக்கப்போகிறேன். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...