ஆந்திர அரசில் பாஜக

 புதிய ஆந்திரத்தின் முதல் முதல்வராக தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக் கிழமை பதவியேற்று கொண்டார்.

அவருடன் 3பெண்கள் உள்பட 19 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டனர். அவர்களில் பா.ஜ.க.,வைச் சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.

விஜயவாடா அருகேயுள்ள நாகார்ஜுனா நகரில் ஞாயிற்றுக் கிழமை இரவு நடைபெற்ற விழாவில் 7.27 மணிக்கு சந்திர பாபு நாயுடுவுக்கு, ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

அதைத் தொடர்ந்து, கே.இ. கிருஷ்ணமூர்த்தி, யனமல ராமகிருஷ்ணுடு, தேவிநேனி உமாமகேஸ்வர ராவ், அய்யன்னபட்ருடு,பல்லே ரகுநாத் ரெட்டி, சின்ன ராஜப்பா, பட்டிபாடி புல்லா ராவ், கண்டா ஸ்ரீநிவாச ராவ், போஜ்ஜல கோபால கிருஷ்ண ரெட்டி, பரிடால சுனிதா,பீதாலா சுஜாதா, கிமிடி மிருணாளினி, பி.நாராயணா உள்ளிட்ட 19 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில் பாஜகவைச் சேர்ந்த காமிநேனி ஸ்ரீநிவாஸ், மாணிக்யாலா ராவ் ஆகியோரும் அடங்குவர்.

விழாவில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, அனந்த்குமார், கல்ராஜ் மிஸ்ரா, பிரகாஷ் ஜாவடேகர், நிர்மலா சீதாராமன், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், நாகாலாந்து முதல்வர் டி.ஆர். ஜெலிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...