கச்சத் தீவு பிரச்னையில் மறு ஆய்வு செய்ய வேண்டும்

 கச்சத் தீவு பிரச்னையில் மறு ஆய்வு செய்ய வேண்டும் கச்சத்தீவு தொடர்பான வழக்கில் சிலநாள்களுக்கு முன்பு மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனு, முந்தைய காங்கிரஸ் அரசால் தயாரிக்கப்பட்டது என்று பாஜக தேசியப் பொதுச்செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான முரளிதரராவ் தெரிவித்துள்ளார்

பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநிலநிர்வாகிகள் கூட்டத்தில், தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை குஜராத் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை நாடுமுழுவதும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியை தக்கவைக்க வேண்டிய மிகப்பெரிய சவால் எங்கள் முன் உள்ளது. மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி மாநிலம்முழுவதும் கட்சியை பலப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை மாவட்ட தலைவர்களும், மாநில நிர்வாகிகளும் முன்வைத்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பான வழக்கில் சிலநாள்களுக்கு முன்பு மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனு, முந்தைய காங்கிரஸ் அரசால் தயாரிக்கப்பட்டது. அதற்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை.

கச்சத்தீவு, இந்திய இறையாண்மைக்கு உள்பட்ட பகுதியா? என்பது குறித்தும் மத்திய அரசு மறு ஆய்வுசெய்ய வேண்டும் என்பதே பாஜக.,வின் கோரிக்கை. கச்சத்தீவு மட்டுமல்ல பல்வேறு பிரச்னைகளை இந்திய மீனவர்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்திய மீனவர்களின் பிரச்னைகளை தீர்க்கவும், அவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்கவும் மத்திய அரசும், பாஜகவும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.

விலைவாசியை குறைக்கமுடியாது: கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைக்கப் பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நரேந்திரமோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இராக்கில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போரும், பருவமழை தாமதத்தால் விவசாயப் பொருள்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதும் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

இந்த நெருக்கடி நிலையை சமாளிக்கவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையும், ரயில் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்குவந்த 30 நாள்களில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண முடியாது. பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், விலைவாசியைக் குறைக்கவும் போதுமான கால அவகாசம்தேவை என்றார் முரளிதரராவ்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...