முன் தேதியிட்டு வரி விதிக்கும்முறை இனி இருக்காது

 முன் தேதியிட்டு வரி விதிக்கும்முறை இனி இந்தியாவில் இருக்காது என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி உறுதிபட தெரிவித்தார். வரிவிதிப்பு தொடர்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நடப்பு நிதி ஆண்டுக்கான மத்தியபட்ஜெட் மீதான உரைக்கு மக்களவையில் வெள்ளிக்கிழமை பதிலளித்து பேசிய ஜேட்லி, முன் தேதியிட்டு வரிவிதிக்கும் முறை இனி இருக்காது, புதிதாக வரிவிதிக்கும் முறைதான் இருக்கும் என்று கூறினார்.

முன் தேதியிட்டு வரி விதிக்கும் முறையை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் கொண்டு வந்தது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த தவறுகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றார். 2012-ம் ஆண்டு மூலதனம் மீதான ஆதாயத்துக்கு வரிவிதிக்கும் முறையை காங்கிரஸ் அரசு கொண்டுவந்ததோடு அதை 2007-ம் ஆண்டு முன்தேதியிட்டு வசூலிக்கப்படும் என்று அறிவித்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

முன் தேதியிட்டு வரிவிதிக்கும் முறையால் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று கூறிய ஜேட்லி, அந்நிய முதலீட்டாளர்கள் குறிப்பாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டுசெயல்படும் வோடபோன் நிறுவன விவகாரம் முன்தேதியிட்டு வரிவசூலிப்பால் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

முன் தேதியிட்டு வரிவசூலிப்பது தொடர்பாக சட்டம் இயற்றுவது இந்திய இறையாண்மையாகும். அதை யாரும் கேள்விகேட்க முடியாது. இருப்பினும் இதை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி ஆராயவேண்டும். அத்துடன் முதலீட்டு சூழலையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...