நீர் வளத்தை பெருக்க இரண்டு கழகங்களும் எண்ண செய்தன

 கர்நாடகத்து அணைகள் அனைத்தும் நிறம்பி வழிகின்றன. திறந்துவிடப்ப்ட்ட உபரி நீர் மட்டும் இன்றய நிலவரப்படி வினாடிக்கு 40,000 அன அடி நீர் வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

அதேவேளையில் தமிழகத்தின் பல பகுதிகள் வரட்சியின் பிடியில் இருந்து இன்னும் மீளவே இல்லை….

சில இடங்களில் மக்கள் குடி நீருக்கே அவதியுற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக அதிவிரைவில் ,இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 91 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது….

அப்போது தமிழக அரசு வேறு வழி இல்லாமல் மேட்டூர் அணையை திறந்து விடும். அப்போது வழக்கமான பயன்பாடுபோக எஞ்சிய உபரி நீர் வீணாக கடலில் கலக்கும் ….

தமிழகத்தில் வழக்கமான பருவமழைக்காலம் துவங்கப்படுவதற்கு முன்பே இந்த நிலை என்றால் இந்த வருட மழைக்காலம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத்தரும் என்பது ஆனந்தத்தின் எல்லை என கூறலாம் ….

எனினும் கூட 1967ல் இருந்து இன்றுவரை தமிழகத்தை திமுக, அதிமுக ஆகிய இரு கழகங்களும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.

பல நீர்த்தேக்கங்கள் தமிழகத்தில் பெயரளவில் இருந்தாலும், நிரம்பி வழிந்ததாக சரித்திரமே இல்லை..

அனேகமாக அனைத்து குளங்களும் தூர் வாறப்படாமல், ஆகாயத்தாமரை செடிகளும், கருவேல மரங்களாலும் சூழப்பட்டு , பாழ் பட்டு கிடக்கின்றது.

தமிழ், தமிழ் என்று வாய் கிழிய கத்தும் மாநிலக்கட்சிகள் விவசாயிகளின் ஜீவாதாரப்பிரச்சனையாகவும், பொதுமக்களுக்கு வாழ்வாதாரப்பிரச்சனையாகவும் இருக்கும் நதி நீர் விஷயத்தில் வாய் மூடி மெளனம் காத்தே வருகின்றது.

செழிப்பான அணைகளை இணைத்து, வரண்ட அணைகளுக்கு நீர் வரத்து ஆதாரங்களைப்பெருக்க இதுவரை இரண்டு கழகங்களும் என்ன செய்தது ?

1967 முதல் இன்றுவரை வெள்ளை அறிக்கையை தமிழக அரசிடமிருந்து ," மத்திய நீர் வளத்துறை " கேட்டுப்பெறவேண்டும்.

அப்போதுதான் இவர்களின் போலி அரசியல் வெளிச்சத்துக்கு வரும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...