மத்திய அரசின் மிக விரைவான முடிவெடுக்கும் திறன் என்னை ஈர்த்துள்ளது

 இந்திய ராணுவ தலைமை தளபதி பிக்ராம்சிங் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மிக விரைவான முடிவெடுக்கும் தன்மை குறித்து வெகுவாக பாராட்டியுள்ளார். மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த தேநீர்விருந்தில், பாதுகாப்பு செயலாளர் ஆர்கே. மாத்தூர் உட்பட அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தகூட்டத்தில் ராணுவ தலைமை தளபதி பிக்ராம்சிங்கும் கலந்துகொண்டார். அவர் பேசும் போது, மத்திய அரசுடன் குறைந்தகால அளவே பணியாற்றியிருந்த போதிலும், அரசின் முடிவெடுக்கும் திறன் குறித்து ஈர்க்கப்பட்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசு பதவியேற்ற குறைந்தகால கட்டத்தில், சீனாவுடனான எல்லை பகுதியில் சாலைகள் அமைப்பதற்கான சுற்றுச் சுழல் அனுமதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆயுதபடைக்காக நிறைவேற்றி உள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பாதுகாப்பு தொடர்பான மந்திரிகுழுவின் முதல் கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ள சர்ச்சைக்குரிய ஆயுதபடை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தில் மாற்றம் எதுவும் கொண்டுவராமல் இருக்க வேண்டும் என்ற ராணுவத்தின் அறிவுரையை ஏற்று கொண்டது என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...