தமிழநாட்டில் , தி.மு.க., – காங்., ஊழல் கூட்டணியை தோற்கடிக்க, எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா தயாராக உள்ளது,” என, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூரில் பாரதிய ஜனதா கட்சி சட்டசபை தொகுதி தேர்தல் ஆலோசனை
கூட்டம், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுவது எனவும், தொகுதி வாரியாக மூன்று ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, தேர்தல் கமிட்டி அமைத்து, தேர்தல் பணி மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள தி.மு.க., – காங்., ஊழல் கூட்டணியை தோற்கடிக்க எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம். “2ஜி’ முடிந்து தற்போது “4ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பணபலம் மற்றும் அதிகாரம் பலமிக்க ஊழல் கூட்டணியை, நாட்டை விட்டு விரட்டுவதற்கு மக்கள் முடிவு செய்து விட்டனர். மக்களை ஒருங்கிணைக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.