உள்ளாட்சி இடைத் தேர்தலில் பா.ஜ.க போட்டியிடும்

 தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலில் பா.ஜ.க போட்டியிடும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணனின் மகள் திருமணவிழா (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூரில் நடந்தது . இந்தவிழாவில் பங்கேற்பதற்காக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி உள்ளாட்சி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக போட்டி யிடும். மேலும் இந்ததேர்தலில் பாஜக உறுதியாக களம் இறங்கும். இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படஉள்ளது.

அதன் பேரில் வருகிற 2-ந்தேதி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் எந்தெந்த பகுதிகளை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து முடிவுசெய்து, அதன் பின்னர் போட்டியிடும் பகுதிகள் அறிவிக்கப்படும்.

பீகாரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் எதிர்கட்சிகள் முரண்பாடான கூட்டணி அமைத்தது. இந்ததேர்தலில் கணிசமான வாக்கு வங்கிகளை பெற்று கவுரமான வெற்றியை பா.ஜனதா பெற்றுள்ளது.

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றபின்பு, ஏழை-எளிய மக்கள் வங்கியில் சேமிப்புகணக்கு தொடங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். இதன் மூலம் ஏழை-எளியமக்கள் எளிதில் கடன்பெற முடியும் என்றார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...