ஆசிரியர்களைப் பெருமை படுத்துவதே குருவைக் கொண்டாடுவோம் எனப் பொருள்தரும் 'குரு உத்சவ்' என்பதன் நோக்கம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்..
ஆசிரியர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், "மாதா, பிதா, குரு, தெய்வம் என்று குருவை கொண்டாடி மகிழ்கிறோம் தமிழ் நாட்டில். அதற்கேற்ப சிறந்த ஆசிரியராகவும், ஆட்சியாளராகவும் இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
நல்ல குடிமக்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களின் தியாகத்தைப் போற்றுவோம். இதைத் தான் மத்திய அரசு 'குரு உத்சவ்', அதாவது 'குருவைக் கொண்டாடுவோம்' என்கிறது. ஆனால், அதையும் அரசியலாக்கி, எது அவசியம் எது அரசியல் என்றில்லாமல் இங்கே சிலர் விமர்சித்து கொண்டிருந்தாலும், நோக்கம் ஆசிரிய பெருமக்களை பெருமைப் படுத்துவதே ஆகும்.
ஆசிரியப் பணி, இறைப் பணிக்கு நிகரானது. அத்தகைய உன்னத பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் பெருந்தகைகளுக்கும், அவர்களால் அறிவொளிபெறும் மாணவச் செல்வங்களுக்கும் உள்ளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை பாஜக சார்பில் தெரிவித்து கொள்கிறேன்" என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.