பள்ளிக்காலங்களிலேயே நிர்மலா சீதாராமன் மிகவும் திறமை வாய்ந்தவர் -பாளி ஆசிரியர் புகழாரம்

பள்ளிக்காலத்திலேயே, நிர்மலா சீதாராமன், அனைத்து துறைகளிலும் மிகுந்த திறமை வாய்ந்தவராக விளங்கியதாக, அவரது பள்ளி ஆசிரியர் நினைவு கூர்ந்தார்.

புதுச்சேரியில் நடந்த இலக்கிய திருவிழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். விழாவில் அவருடைய பள்ளி ஆசிரியர் சபிதா, பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார். அவரது காலில் மத்திய அமைச்சர் விழுந்து ஆசி பெற்றார்.

பின்னர், முன்னாள் ஆசிரியர் சபிதா கூறியதாவது:

கடந்த, 1974-76ம் ஆண்டு காலகட்டத்தில், திருச்சி, ஹோலி கிராஸ் பள்ளியில், நான் ஆசிரியராக பணிபுரிந்தேன். அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னிடம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படித்தார். நான் அவருக்கு சமூக அறிவியல், வரலாறு, புவியியல் பாடங்களை சொல்லிக் கொடுத்தேன்.

அவர் அப்போதே, பேச்சு, கட்டுரை மற்றும் வினாடி – வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார். ஒரு வினாடி – வினா போட்டியில், ‘மிசா’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பள்ளி மாணவர்கள் யாரும் பதிலளிக்கவில்லை. அந்த கேள்விக்கு, சரியான பதில் அளித்த ஒரே மாணவி, நிர்மலா சீதாராமன் மட்டுமே.

அவர் பதில் சொன்னதற்கு முதல் நாள் தான், அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அந்த விஷயமும், அன்றைய நாள் காலையில் செய்தித்தாளில் தான், வெளியாகி இருந்தது. அந்தளவிற்கு பள்ளிக்காலத்திலேயே, பொது அறிவில் சிறந்து விளங்கியவர். அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...