29, 30 ஆகிய இருநாட்கள் மோடி ஒபாமா சந்திப்பு

 அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்திய பிரதமர் வரும் 29, 30 ஆகிய இருநாட்கள் சந்தித்துப் பேசவுள்ளார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னெஸ்ட் கூறும் போது, "செப்டம்பர் 29 மற்றும் 30ம் தேதிகளில் இந்தியபிரதமர் மோடியை சந்தித்துப்பேச அமெரிக்க அதிபர் ஒபாமா ஆர்வமாக உள்ளார்.

இருநாடுகளின் குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு , பல்வேறுதுறைகளில் இருதரப்பும் கூட்டாளிகளாக செயல்படுவதற்கான வழிவகைகள் குறித்து இருவரும் பேச்சு நடத்துவார்கள்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்திய பிரதமர் நரேந்திரமோடி வரும் 29, 30 உள்ளிட்ட இரு நாட்கள் சந்தித்துப் பேசவுள்ளார்கள், ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் நாடுகளின் அரசியல்நிலவரம் குறித்து இருவரும் விவாதிப்பார்கள்" என்றார்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கெய்த்லின் ஹேடன் கூறும்போது, "இரு தலைவர்களின் சந்திப்பு குறித்த முழுவிவரங்களை 2 வாரங்களுக்குப் பிறகு வெளியிடவுள்ளோம். இருவரும் செப்டம்பர் 29, 30 ஆகிய இருநாட்கள் சந்தித்துப்பேச ஏற்பாடு செய்துள்ளதன் மூலம் இருநாடுகளின் இடையேயான உறவை மேம்படுத்த நாங்கள் அளித்துவரும் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம்" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...