‘யு- டியூப்’பில் இரண்டுகோடி சந்தாதாரர்களை எட்டிய முதல் உலகத் தலைவர்

பிரபல சமூக ஊடகமான, ‘யு- டியூப்’பில் இரண்டுகோடி சந்தாதாரர்களை எட்டிய முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திரமோடி பெற்றுள்ளார்.

சமகால அரசியலில் டிஜிட்டல் தளங்களை அதிகமாக பயன் படுத்தும் தலைவர்களில் ஒருவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.சமூக ஊடகங்களான, ‘யு டியூப், எக்ஸ், வாட்ஸாப்’ போன்றவற்றில் தொடர்ந்து இயங்கிவரும் அவர், பல ‘வீடியோ’க்களையும் பதிவிட்டுவருகிறார்.அரசின் கொள்கைகள், செயல் பாடுகள் போன்றவை அவரது தனிப்  பட்ட பக்கத்திலும், பிரதமருக்கான அதிகாரப்பூர்வ பக்கத்திலும் பகிரப்பட்டு வருகிறன்றன.

இந்நிலையில், யு டியூபில் அதிக சந்தாதாரர்களை பெற்ற தலைவர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது.அதன்படி, பிரதமர் நரேந்திரமோடியின் யு டியூப் சேனல் இரண்டு கோடி சந்தாதாரர்களை பெற்றுள்ளது.கடந்தஆண்டு பிப்ரவரியில் ஒரு கோடி பேரை சந்தாதாரர்களாக பெற்ற நிலையில் தற்போது அது 2 கோடியாக உயர்ந்துள்ளது.

அவரதுதளத்தில் வெளியிடப்படும் வீடியோக்கள் 450 கோடி முறை பார்வையிட பட்டுள்ளன. அதேபோல் பிரதமருடன் தொடர்புடைய, ‘மோடியுடன் யோகா’ என்ற யு டியூப் சேனலும், 73,000க்கும் அதிகமான சந்தாதாரர்களை பெற்றுள்ளது.

பிரதமர் மோடிக்கு அடுத்த படியாக, 64 லட்சம் சப்ஸ்க்ரைபர்களுடன் தென் அமெரிக்க நாடான பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனோரா இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில், 11 லட்சம் பேருடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளார்.

இதையடுத்து நான்காவது இடத்தில் 7.94 லட்சம்பேருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளார். மற்ற குறிப்பிடத் தக்க இந்திய தலைவர்களில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் சேனலுக்கு, 35 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...