மக்களவை நன்னெறி குழுவின் தலைவராக பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே. அத்வானி நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை தலைவர் சுமித்ராமகாஜன் இதற்கான நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த 15வது மக்களவையின் நன்னெறிக்குழு தலைவராக காங்கிரஸ் கட்சியின் மாணிக் ராவ் காவிட் இருந்தார்.
இக்குழு உறுப்பினர்களாக, ஏ.அருண்மொழித் தேவன், நினோங் எரிங்,ஹேமந்த் துக்காராம் கோட்சே, ஷேர் சிங் குபாயா, பிரஹலாத் ஜோஷி, பகத்சிங் கோஷ்யாரி, அர்ஜுன் ராம் மேக்வால், கரியா முண்டா, பரத்ருஹரி மஹ்தாப், ஜெய்ஸ்ரீபென் படேல், மல்லா ரெட்டி, சுமேதானந்த் சரஸ்வதி, போலா சிங் ஆகியோர் உள்ளனர்.
சாந்தகுமார் தலைமையிலான பொதுவிவாகாரங்கள் குழு உறுப்பினராகவும், அனுராக்தாகுர் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப குழுவின் உறுப்பினராகவும் அத்வானி உள்ளார்.
மக்களவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினராக, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர்ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் பிசி கந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
Leave a Reply
You must be logged in to post a comment.